Saturday, November 21, 2009

உயிர் கொடை

உயிர் கொடை என்பது என்ன ? பல கருத்துக்கள் இருக்கின்றன தியாகம், வேள்வி,

மூளைச்சலவை, கொலை,ஈகை இப்படிக்கூறிக்கொண்டே போகலாம். ஈழமக்களின்

உரிமைப் போராட்டக் களத்திலே இந்த உயிற்கொடை எப்படி நோக்கப்படவேண்டும்.

வேள்வி அல்லது தியாகம் என்பதுதான் பொருத்தமாக அமைகிறது. எந்த ஒரு உயிரும்

தெரிந்துகொண்டு உயிரைக் கொடுக்கச் சம்மதிப்பதில்லை. தற்கொலை என்பது கூட

உடனடியாக மனதில் ஏற்படும் சடுதியான முடிவே யல்லாமல் திட்டம் போட்டு யாரும்

தற்கொலை செய்வதில்லை. முயல்பவரின் செயலில் திடிரென ஏற்படும் எதிர்பாராத

தடங்கல் தற்கொலை முயற்சியைக் கைவிடவைக்கிறது. அதனால் அவர் இரண்டாவது

தடவை முயற்சி செய்வதில்லை. கடுமையான மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்கள் மட்டுமெ

மீண்டும் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். மூளைச்சலவை என்பது கூட

நூறு வீதம் சரிவருவதில்லை. பல மனவியாலாளர்களின் கருத்துப்படி எவ்வளவுதான் மூளைச்

சலவை செய்து தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் படுத்தினாலும் அந்நபரின் அடி மன

தில் உள்ள உயிரின் மேலுள்ள ஆசை கடைசிநேரத்தில் அது நடக்காமல் தவிர்த்து

விடுகிறது. ஆகையால் தன் உயிரைத் தற்கொடையாக் கொடுப்பதற்கு நல்லமனத்திடம்

இருக்கவேண்டும். தான் கொடுக்கும் கொடை அவர்கள் மனதில் ஓர் அமைதியைக்

கொடுக்கவேண்டும்.மனமகிழ்சியையும் கொடுத்திருக்கவேண்டும். மூளைச்சலவை மூலம்

அவர் தற்கொலைக்கு வந்திருந்தால் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருப்பார் முயற்சி

தோற்றிருக்கும். கொள்கை ரீதியாக மனதைத் திடப்படுத்தியவர்களால் மட்டுமே தமது

பாரிய பொறுப்பை எவ்வித மனத்தடுமாற்றம் இன்றி தற்கொடையைக் கொடுத்திருக்க

முடியும். ஈழப்போரில் எதிரியானவன் எல்லா வளங்களுடனும் மிகப்பெரிய மனித வலு

வுடனும் களத்தில் நிற்கும்போது வளங்கள் அற்ற சிறு எண்ணிக்கைய்யான மனித

வளத்துடன் உள்ளவர்களால் இந்த உயிர்கொடை மூலமே பாரிய அழிவை கொடுக்க

முடியும் கொடுக்கமுடிந்த து ஒரு தற்கொடையாளி பலவருடம் பல பயிற்சிகளைப்

பெற்றுத் தன்னை தயார் படுத்துகிறான் என்றால் அவன் தான் செய்ய உள்ள கடமையில்

எவ்வளவு காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் தன்

கொடையால் வருங்கால சமுதாயம் சுதந்திரம் பெற்றுச்சுபிட்சமான வாழவைப்

பெறும் என மனப்பூர்வமாக நம்பினதால்தான் அந்த செயலில் எவ்வித தயக்கமும்

இன்றிச்செயல் படுகிறான் செயல் பட்டிருக்கிறான்.

மூளைச்சலவை செய்து பிக்பாக்கற் அடிக்கவைக்கலாம், களவெடுக்கவைக்கலாம்,

மற்றவர்களை ஏச வைக்கலாம், வம்புச்சண்டைக்குப் போகவைக்கலாம், மற்ற ஒரு

உயிரை கொல்ல வைக்கலாம் ஆனால் தன் உயிரைக் கொல்லவைக்க முடியாது.

ஆகையால் மூளைச்சலவை மூலம் தற்கொடைப்போராளி உருவாகிறான் என்பது

வீண் வாதமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

தியாகமும் மனத்திடமும் கொள்கைப்பற்றும் இருந்தால் மட்டுமே ஒருவரால் இந்த

வேள்வியில் ஈடுபடமுடியும், தன்னை ஆகுதி யாக்க முடியும்.

யப்பானியர்களால் இரண்டாம் உலக யுத்த த்தின் போது எதிரி கப்பல்களை அழிக்க

உருவாக்கியதே இந்த தற்கொலைத்தாக்குதல். சில இஸ்லாமியக்குழுக்களால் இந்த

தற்கொலைத் தாக்குதல் பின்பற்றப் பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜிகாத் என்பதும் ஈழத்தமிழரின் தற்கொடைத் தாக்குதல் என்பதும்

ஒன்றாக நோக்கப் படக்கூடாதது. அது வேறு இது வேறு

இதைத் தற்கொடை யாகவும் வேள்வி யாகவும் மிகப்பெரும் உயிர் ஆயுத மாகக்கட்டி

எழுப்பியவர்கள் ஈழத்தமிழ்ப்புலிகள் மட்டுமே.

No comments: