Thursday, July 30, 2009

[தன்னம்பிக்கையை வளர்த்தல்]

தன்னம்பிகை பற்றி பல புத்தங்கள் வெளிவந்துள்ளன,
அத்தனை புத்தகங்களை வாழ் நாள் முழுவதும் வாசித்
தாலும், தன்னம்பிக்கை தானாக வரும் என்பது
கேழ்விக்குறியே.

நீங்களாக முயற்சி எடுத்தாலே அன்றி தன்னம்பிக்கை
தானாக வரமாட்டாது. தன்னம்பிக்கையைக் கட்டி
எழுப்புவது அவ்வளவு சுலபமும் இல்லை.

தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும் உங்கள் முயற்சி
யில் நீங்கள் பல தவறுகளை விடலாம். அப்படி தவ
றுகள் ஏற்படும் என்பதை நீங்கள் எதிர்பாற்தே இருக்
கவேண்டும்.

எப்படித் துவிச்சக்கர வண்டியை ஓட்டக் கற்கும் போது
பல தடவை கீழே விழுந்து, முழங்காலில் பல சிராய்ப்
புகள் ஏற்பட்ட போதும் மீண்டும், மிண்டும் எழுந்து
வண்டியின் இருக்கையில் ஏறி நீங்கள் ஓட்டக் கற்றுக்
கொண்டிர்கள் அல்லவா. ஒரு நாள் எது விததடுமாற்றமும்
இல்லமல் உங்களால் வண்டி ஓட்டமுடிந்ததுதானே.

தொலைக்காட்சி பாற்பதாலோ பல புத்தங்களை
வாசிப்பதாலோ தன்னம்பிக்கை தானாக வருவதில்லை.

எது தேவையோ அதை நோக்கிய பயணம் தடைபடா
து தொடரவேண்டும் அப்போது அது கைகூடும்.
தன்னம்பிக்கை என்பது பாட நெறியல்ல. அது ஒரு
உணற்சி, மனத்தின் தன்மைதான் அதை தீர்மானிக்
கிறது.ஆகையால் அது சம்பந்தமான உறுதியான
முயற்சி அவர்களிடம் இல்லையானால் யாராலும்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்ப முடியாது.

என்ன வழி முறையில் முயற்சி செய்தால் தன்னம்
பிக்கை உருவாகுமோ அந்த வழியை உணர்ந்து
அதன் வழி செல்லவேண்டும்.

பொன்னோ,
பணமோ கொடுத்து தன்னம்பிக்கை
வாங்க முடியாது. அது கடையில் விற்கும் பொரு
ளும் இல்லை.மருந்துக் கடைகளிலும் கிடைக்கின்ற
பொருளும் அல்ல. அல்லது ஒரு வைத்தியர் ஒரு
குப்பியில் தன்னம்பிக்கை நிரப்பி நாள் ஒன்றுக்கு
மூன்று தரம் சாப்பிடுங்கள் என சீட்டை ஒட்டித்தரக்கூ
டிய பொருளும் அல்ல.

யார் தன்னம்பிக்கையை உங்களுக்குத் தரமுடியும்
என்றால் அவர் வேறு யாரும் இல்லை, நீங்கள்..நீங்கள்
மட்டுமே. உங்களால் மட்டுமே தன்னம்பிக்கையை
ஏற்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் உங்கள்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பக் கைகொடுக்கும்
என்பதை மறந்து விடாதிர்கள்.

எதைச்செய்தால் தன்னம்பிக்கை எற்படும் என்று
கருதுகிறீர்களோ, அதை நோ
க்கி உங்கள்
முயற்சியை ஆரம்பித்தீர்களானால் கட்டாயம்
உங்களால் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பி
தன்னம்பிக்கை நிறைந்தவராக மிளிரமுடியும்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தன்னம்பிக்கை
மிக மிக முக்கிமானது.
[This article give insight to the truth
to build your confidence.]


Tuesday, July 28, 2009

[மனித உரிமைகள்]

உயிர் வாழும் உரிமையை இறைவன் கொடுத்
துள்ளான்.ஆனால்மற்ற உயிர் இன ங்களை
உணவுக்காகவோ அல்லது உல்லா
சத்திற்காகவோ அழிக்கும் கொடுமையை மனி
தன் தன் கையில்எடுத்துக்கொண்டான்.அதே
சமயம் மனிதன் மனிதனை அழிக்காமல்
ஒவ்வொரு நாடும் சட்டங்களின் துணையையே
நாடி வருகின்றன. அவர்கள் மனிதராக இருப்
பதால் அவர்களுக்கு அழிக்கமுடியாத சில உரிமை
கள்இருக்கின்றன. இந்த உரிமைகள் தான்
மற்றவர்களிடமிருந்துஉங்களைத்துன்புறுத்
துவதிலிரிந்தோ அல்லது கொலைசெய்வதில்
இருந்தோ பாதுகாக்கிறது. அந்த உரிமைகள் தான்
மற்றவர்களுடன்சேர்ந்து அமைதியாக வாழ்
வதற்கு வழி அமைக்கின்றன.பெரும்பாலனவர்
களுக்கு இந்த மனித உரிமைகளில் ஒரு சில
மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். அவை
களில் தாங்கள்செய்யும் வேலைக்கு கூலி கொ
டுக்கப்படவேண்டும் என்பதும்தாங்கள் ஓட்டு
அழிக்க உரிமை உள்ளவர்கள் என்பது மட்டுமே

மேற் கொண்டு இருக்கும் உரிமைகள் என்ன
என்னஎன்பதைஅறியாதவர்களாகவே இருக்கி
றார்கள்உங்கள் உரிமை தெரியாத நிலையில்
இனப்பாகுபாடு, சகிப்புத்தன்மை, நீதி அற்ற
தன்மை, அடக்குமுறை மற்றும்அடிமைத்தனம்
முதலியவை தலைதூக்கின்றன.


இரண்டாம் உலகயுத்தம் நடைபெற்றபோது நடந்
த மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும்
மனிதப்பேரழிவுகளின்பின்னர் தோன்றிய ஜக்கிய
நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப் பட்டதே
இந்த மனித உரிமைப்பிரகடனமாகும்.

இப்பிரகடனம் மூலம் இந்த உலகத்தில் வாழும்
சகலரும்சுதந்திரமாகவும், நீதியாகவும்,அமைதி
யாகவும் வாழும்அடிப்படை உரிமையைக்கொண்
டுள்ளார்கள்என்பதைத்தெளிவு படுத்தியது.
மனிதப்பண்பு உலகமெல்லாம் போற்றப்பட
எங்கும் அமைதி தவழ, சுதந்திரமும் நீதியும் உல
கில்நிலைபெற்று ஓங்கிட மனித உரிமைகள் ஏற்
கப்பட்டுப் போற்றப்பட்டு சட்ட பூர்வமான வழி

களில் அவை காக்கப்படவேண்டும் என்பதுதான்
இந்தப்பிரகடனம்.

இதன் முதற்பிரிவு இப்படிக்கூறு
கிறது, “ மனிதர் யாவரும்சம்மே” எனும் சம்த்துவக்
கோட்பாடு மனிதர்களிடையே மதம், பிறப்பிடம்
போன்ற எந்த வகையான அடிப்படையிலும்பாகு
பாடுகள் இருக்க க்கூடாது
அனைவரும் சமம் யாவரும் சகோதரத்துடன்
இணைந்துவாழவேண்டும் என்பதாகும்
உலகில் ஒரே மாதிரியான சட்டம் இருக்க
வேண்டும் என ஜநா எதிர் பார்த்தாலும் ஒவ்
வொருநாடும்தங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி
இந்தச் சட்டத்திற்குவிளக்கம் கொடுக்கிறார்கள்.

ஆசியாவின் மிகப் பெரியசனநாயக நாடு என்று
கூறப்படும் காந்தி தேசம் இதுநாழ்வரை இந்தப்
பிரகடணத்தை ஏற்று கையெழுத்திடவில்லை
என்பது மிக நகைப்புக்கிடமானது.
அதே போல்உலக வல்லரசு என்று சொல்லிக்
கொள்ளும் அமெரிகாவும் இப்பிரகடனத்தை
ஏற்றுக்கொள்ளவில்லை அடுத்தஉண்மையா
கும்.

பெரும் பான்மையான மேலைநாடுகள்
இந்த மனிதஉரிமைசம்பந்தமாக நேர்மையாக
நடப்பதில்லை. தங்கள் நலம்சார்ந்த விடை
யங்களில் மனித உரிமை பற்றி எதுவித கவலை
யையும் அற்றவர் களாகவே செயல் படுகிறார்கள்.

உலகில் பலநாடுகளில் இன்றுவரை மனித உரிமை
மீறல்கள்பற்றிய அதிகமான முறைப்பாடு காவல்
துறை, இராணுவம், சிருடைஅணிந்த துறைகளில்
பணிபுரியும் அலுவலர்கள் செய்த அத்துமீறல்கள்
பற்றியதாகத் தான் இருக்கின்றன. மனித உயிர்கள்
அவசியம் இன்றிக்கொல்லப்படுதல், தேவைஅற்ற
முறட்டுவழிகளில்மனிதர்களைத் துன்புறுத்து
வது, அவமானப்படுத்தப்படுவது ஆகியன சீருடை
அணிந்தவர்களால் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்
றனஎன்பது மிக்க் கசப்பான உண்மையாகும்.
அமைப்பு ரீதியாக திரள்வது, பேச்சுரிமை முதலியன
மறுக்கப்படுகின்றன.

சமிபத்தில் ஜநா செயலாளரின் சிறப்புப்பிரதிநிதி
வெளியிட்டஅறிக்கையில் நில உரிமைகள், இயற்
கை வழங்கள், சுற்றுச்சூழல் முதலான பிரச்சினை
களை கையில் எடுக்கும் மனிதஉரிமைப் போராளி
கள் இன்று அதிகம் ஆபத்தில் உள்ளனர்என்பதைச்
சுட்டிக் காட்டியுள்ளார். மனித உரிமைகளைப்
பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று
உலகெங்குமுள்ளது. செப்ரம்பர் 11 க்கு பின் இது மிக
மோசமாகியுள்ளது.
[This article explain the full components of
of Human Rights and its application.]

Monday, July 27, 2009

[கவிதை இலக்கணம்]

கவிதைக்குரிய இலக்கணம் எனப்பார்த்தால் எதுகை, மோனை,
சீர் என்பன கவிதைக்குரிய இலட்சணமாகும். கவிதைகளில்
எதுகை முக்கியம். அதுதான் கவிதைக்கு இனிமைதருபவையா
கும். கவிதைஎழுதும் போது ஒவ்வொரு அடியின் ஆரம்பத்தில்
எதுகை இருந்தால்அது தனிச்சிறப்புப்பெறும். எதுகை என்பது பாட்
டின் வரிகளில்வரும் சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி
அமையும். உதாரணத்திற்குஒரு கண்ணன் பாட்டு ஒன்றை எடுத்
துள்ளேன்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மாசெல்வக்களஞ்சியமே
என்னைக்கலிதிர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்.
"

முதல் வரியில், இரண்டாவது எழுத்து 'ன்' என்று வந்துள்ளது போல்
இரண்டாவதுவரியில் இரண்டாவது எழுத்து 'ன்' என்றுவந்துள்ளது.
இப்படி எதுகை அமையும் போதுஅந்தக் கவிதை சிறப்பு பெறும். முன்பு
வரும் சினிமா பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக, இன்றும் பலர்
விரும்பிக்கேட்பதற்குரிய காரணம் அந்தப்பாடலில் உள்ள கவிநயம்.
இசையுடன் சேர்ந்து கருத்து அழியாமல் மெல்லத் தவழ்ந்து வரும்
போது மனதிற்கு மகிழ்ச்சியையும் ஒரு மன அமைதியையும் கொடுக்
கின்றன. அப்படி அந்தபாடல்கள் அமைந்ததற்கு இந்த எதுகையும்
மோனையும் தான் வழி சமைத்தன என்றால்மிகை யாகாது.

இந்தக்காலக் கவிதைகள் வெறும் வசன நடையாகவே இருக்கிறது.
அதனால் தான் சமீபத்தில் வந்த எந்த ஒரு பாடலும், சாகா வரம்
பெறவில்லை. படம் திரையைவிட்டு அகன்றதும் அந்தப்படப்
பாடலும் காணாமல் போய்விடுகின்றன.

கண்ணதாசன், வாலி, மருதகாசி போன்ற கவிஞர்களின் படைப்புக்கள்
என்றும் அழியாமல் அலையில் தவழ்ந்து வருகின்றன.
இவர்கள் எவரும் சங்க காலப்பாடல் போல் கடும் இலக்கணத்துடன்
பாடல் இயற்றவில்லை. வெகு எழிய தமிழில் ஒத்த ஓசையுடைய
சொற்களைச்சேர்த்துக் கவிபுனைந்தவர்கள்.
சங்ககாலப் பாடல்கள் கடும் இலக்கணத்துடன் அமைந்தவை
சாதாரண மக்கள் பொருள் அறியும்வண்ணம் அப்பாடல்கள்
அமையவில்லை.சாதாரணமாக, யாவரும் பொருள்
அறிந்து கொள்ளக்கூடியதாக எந்த இலக்கணம் இல்லவிடினும்
எதுகைமோனை வரும்படியாகச் சொல்அமைத்து கவி
புனைந்தால்அந்தக்கவிதைகள் ஓசை நயம்மிக்க
கவிதைகளாக அமையும்.உதாரணத்திற்கு அடுத்த
ஒரு கண்ணன் பாடலை எடுத்துள்ளேன்

"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்குப்பகலிடம் கோபமில்லை
ஏழையின் காதலில் பாபமில்லை
"

இப்பாடலை இராகம்(Tune) இல்லமல்பாடினாலும் இனிமையாகவே
இருக்கிறது.கண்ணதாசன் சங்க காலத்தமிழில் பாடல்
புனையவில்லை சாதாரண தமிழில்தான் அவர் கவிதை
புனைந்தார். அவர் புனைந்த அத்தனை கவிதைகளிலும்,
எதுகை மோனை கண்டிப்பாக இருக்கும். கவிதைக்கு ஓசை நயம்
மிக மிகஅவசியம். கவிதைக்குதான் இராகம்
போடவேண்டுமே அல்லாமல் இராகத்திற்காகக் கவிதை
எழுத முயலக்குடாது என்பது என் அபிப்பிராயம்.

அமைந்து விட்ட எதுகை மோனையுடன் சந்தம் நிறைந்த
பாடலுக்கு இராகம்போடும்போது பாடலுடன் இணைந்து
இராகம் வரும்போது அந்தப்பாடல் எல்லோர் மனதையும்
கவர்ந்த பாடலாக அமைந்து விடுகிறது. அத்துடன் சாகா
வரத்தையும் பெற்றுவிடுகிறது. இராகத்திற்காகப்
பாட்டுஎழுதும் போது கவிதைக் கிருக்கிற எந்த
இலக்கணமும் இல்லததால் இராகம் இல்லாமல்
பாடலைப்பாடினால் அது வசன நடையாகவேவரும் என்பது
முற்றிலும் உண்மை. இது எப்படி இருக்கிறதென்றால்
குதிரைவண்டிக்கு முன்னால் பூட்டவேண்டிய குதிரையை
வண்டியின் பின்னால் பூட்டியமாதிரி
இருக்கிறது

ஆகையால் கவிதை இலக்கணம் என்று நான் சங்க கால
இலக்கணத்தைக்குறிப்பிடவில்லை.கண்ணதாசன் கால
கவிதை இலக்கணத்தைக் கைக்கொணடு எதுகை மோனை
வரும் வண்ணம் கவிதை புனைவதையே இங்கு நான்
குறிப்பிட்டுள்ளேன்.

கடைசியாக கவிதை, கவிதைக்குரிய இலக்கணங்களுடன்
வெளிவரவேண்டும். அப்போது தான் தமிழ் தமிழாக இருக்கும்
என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
[ This article explain the minimum rules to be
followed when composing a poem.]

Sunday, July 26, 2009

[வெற்றிநோக்கியபயணம்]

வெற்றிக்கனியை எமக்காக்கத்தெரிந்து
கொள்ளவேண்டிய நாலு முக்கியமான
வழிமுறைகளாவன முறையே
1. தன்மை மாறுதல் எப்படி என அறிதல்
2. காலவிரையம் பற்றியஅறிவை
மேம்படுத்துதல்
3. ஈடு பாட்டின் அழவுகோலை உறுதிப்
படுத்தல்
4. முயற்சியின் தரத்தை உயர்த்துதல்
என்பனவாகும்.
(அடுத்த பதிவில் தன்மை மாற்றல்
பற்றிய வழிமுறைகளை ஆராய்
வோம்)