Friday, August 28, 2009

[இலங்கைத் தமிழர் பிரச்சினை]

ஈழத்தமிழர் பிரச்சினை என்றால் என்ன என்பது
நூறு சத வீதமான இந்தியர்களுக்குத்தெரியாது.
அவர்களுக்கு இந்தியச்சரித்திரமே தெரியாதது
இவர்களுக்கு எப்படி ஈழத்தமிழர் பிர்ச்சினை புரியும்.
அதனால் விரிவாக ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி
ய அறிவை இந்தியத்தமிழர்களுக்கு தெரியவைக்க
முயற்சிக்கிறேன்.அதிலும் குறிப்பாக சித்தூர் எஸ்
முருகேசன் போன்றவர்களுக்கு இது சமர்ப்பணம்.

இலங்கையின் பூர்வீக குடிகளே தமிழர்கள் என்பது
பெரும்பாலனவர்களுக்குத்தெரிவதில்லை.
1505ல் போர்த்துக்கீசர் இலங்கையைப்பிடிக்கும்
போது இலங்கையில் தனித்தனியான மூன்று
இராச்சியங்கள் இருந்திருக்கின்றன. அதில் இரண்டு
சிங்கள இராச்சியங்களும் ஒரு தமிழ் இராச்சியம்
என்று சொல்கின்ற யாழ்ப்பண இராச்சியம் வடக்கு
கிழக்கு இணைந்த பகுதியில் இருந்திருக்கிறது.இது
சம்பந்தமான ஆவணங்கள் இன்றும் போர்த்துக்கல்
அரசு ஆவணக்காப்பகத்தில் பாதுகாப்பாகவைத்திருக்
கிறார்கள்.

1779ல் டச்சுக்காரர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்
பற்றினார்கள். இவர்கள் காலத்தில் தேசவழமைச்சட்டம்
Roman Dutch Law வையும் நடைமுறைக்குக்கொண்டு
வந்தார்கள். இன்றும் யாழ்ப்பாணத்தில் இவர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட தேசவழமைச்சட்டம் தான்
நடைமுறையில் இருந்து வருகின்றது.

பிரித்தனியர் 1789ல் மூன்று இராச்சியங்களையும்
வெவ் வேறு காலப்பகுதியில் கைப்பற்றினார்கள்.
அவர்கள் ஆவணங்களிலும் தனித் தனியாக இறமை
யுள்ள மூன்று இராச்சியங்கள் இருந்ததை ஆவணப்
படுத்தியுள்ளார்கள். இன்றும் லண்டனில் உள்ள குடி
யரசு ஆவணப்பகுதியில் இவற்றை யாரும் பார்வை
யிடலாம்.மூன்று இராச்சியங்களையும் தனித்தனியாக
நிர்வகித்த பிரித்தானியர் 1815ல் ஏற்பட்ட கண்டி உடன்
பாடு காரணமாக நிர்வாக வசதிக்காக மூன்று இராச்சி
யங்களையும் ஒன்றாக்கி ஏக இலங்கை யாக 1948ம்
வருடம் வரை ஆண்டார்கள்.

இந்தியத்தலைவர்கள், தமிழ்நாட்டுத்தலவர்கள் உட்பட
இலங்கைத்தமிழர்கள் பிரித்தனியரால் தோட்டத்
தொழிலாளர்களாகக்கொண்டுபோனவர்கள்தான் எனறு
தவறாக நினைக்கிறார்கள்.

1648 ல் பிரித்தானியர் தோட்டத்தொழிலாளராக இந்தி
யத்தமிழரைக் கொண்டுவருமுன்பே இலங்கையின் வடக்
கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத்தமிழர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.5 ஆயிரம் வருடங்களாக வடகிழக்கு
மாகாணங்களில் தமிழர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து கொண்
டிருக்கிறார்கள் என்பது சரித்திர பூர்வமான உண்மை.

தினகரன், தினமணி, இந்து பத்திரிகைகளில் எழுது
வதைப்படித்துவிட்டு அதுதான் இலங்கைத்தமிழர்
சரித்திரம் என நினைகும் ஞானசூன்யங்கள் நிறைந்த
இடம்தான் தமிழநாடு மாநிலம். அண்ணாத்துரை,
இராஜாஜி, ம.பொ.சி, பெரியார் போன்றவர்களுக்கு
நான் எழுதியுள்ள இலங்கைத்தமிழர் சரித்திரம் அத்து
படி அதனால்தான் 1967ல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்
பந்தம் கையெழுத்தானவுடன் அறிஞர் அண்ணா
"வீழ்ந்து பட்டதமிழர்கள்" "துரத்தி அடிக்கப்பட்ட
தமிழர்கள்" என இரு பிரிவுத்தமிழர்கள் இலங்கை
யில் வாழ்கிறார்கள் எனத்தெரிவித்திருந்தார்

இந்தியசரித்திரமே ஆக்கபூர்வமாகத்தெரியாத கிணற்றுத்
தவளைகளுக்கு இலங்கைத்தமிழர் சரித்திரம் எப்படித்
தெரியும். அதனால் தான் தெரியாமல் உளறவேண்டாம்
என்று கத்துக்குட்டியான சித்தூர்.எஸ்.முருகேசனுக்குத்
தெரிவித்திருந்தேன்.கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று ஆன்றோர் சொல்லியுள்ளார்கள்.எனக்
கு எல்லாம் தெரியும் என்று அகம்பாவத்துடன் துள்ளிக்
குதிப்பவர்கள் எதுவும் தெரியாத கத்துக்குட்டிகள் என்று
நான் கூறுகிறேன்.அது இந்தச் சித்தூர்.எஸ்.முருகேசன்
போன்றோருக்கும் பொருந்தும்.

1948 ல் இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது
இலங்கைத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரச
மைப்புச்சட்டத்தில் 29 வது சரத்து என்று ஒன்றைச்
சேர்த்திருந்தார்கள். அதை 1972 ல் கொண்டுவந்த
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீக்கிவிட்டார்
கள்.இதை எதிர்க்கவேண்டிய பிரித்தனியர் அமைதி
யாக் இருந்து விட்டார்கள்.பிரித்தானியர் விட்ட
பிழையால் இலங்கைத்தமிழர் இவ்வளவு சொல்லொ
ணாத்துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

1956 ல்,1958 ல்,1961 ல்,1962 ல்,1972 ல்,1977 ல்,
1983 ல் ந்டைபெற்ற தமிழர் அழிப்பு எல்லாம் பிரபாக
ரனின் கட்டமைபு வருமுன் நடைபெற்றவை.இவை
நடந்த காரணங்களால்தான் பிரபாரனின் கட்டமைப்பு
ஏற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கைத்தமி
ழர் பிரச்சினைக்கு பிரபாகரன் காரணமில்லை.சிங்க
ளவரின் பேரினவாத அரிசியல் தான் காரணம் என்பதை
அறிந்துகொள்ளவும்.

பூர்வீக குடிகள்தான் தாங்கள் இழந்த உரிமையைக்கேட்கிறார்
களே அல்லாமல் வந்தேறு குடிகள் அரசுரிமை கேட்க
வில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.

Sunday, August 23, 2009

[ஈழம் துளிர் விடும்]

இந்த உலகில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒர் இடம் அதை ஆளும்
உரிமை இவைகளுக்காகபோராடி வருகின்றார்கள்.முதலாம் யுத்தம்
ஏற்படுவதற்கு முன்பு இருந்தநாடுகளின் எண்ணிக்கை யுத்தம் முடிந்ததும்
பல புதிய நாடுகளின் வரவால் உயர்ந்தது. அதன் பின்பு இரண்டாவது உலக
மகாயுத்தம் ஏற்பட்டு முடிவடைந்ததும் மேலும் பல நாடுகள் புதிதாகத் ஏற்பட்டன.
எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால் முன்பு மூன்று அல்லது நான்கு இனங்கள்
சேர்ந்து ஒரு நாடாக வாழ்ந்துவந்த நாடு தனித்தனி இனங்களுக்கான் நாடாகப்பிரிவு
பெற்றுப் புதுநாடுகளாக விரிவடைந்தன.

ஒவ்வொரு இனமும் அடிமைநிலையிலிருந்து சுதந்திர நாடாகப் பரிணமிக்கப்
பலவருடங்களாகப்போராடி வருகின்றன். அந்தப்போராட்டங்களை அந்த இனங்களை
அடக்கி ஆளும் அரசாங்கங்கள் பல அடக்குமுறைகளைப் பிரயோகித்து எதிர்த்து
வருகினறன. அப்படி இருந்தும் பல நாடுகள் தனித்தோ அல்லது வேறு ஒரு
பலம்வாய்ந்த நாட்டின் உதவியுடனோ சுதந்திர நாடாகப்பரிணமிக்கின்றன்.

பல்லாயிரம் வருடங்களாக தம்மை ஆண்ட ஈழத்தமிழர் ஆங்கில ஏகாதிபத்தியத்திடம்
இழந்த இறமையை மீட்க கடந்த 60 வருடங்களாகப்போராடி வருகிறார்கள். முதன்
முறை இலங்கைஅரசு ஆங்கிலேயர் வழங்கிய சிறுபான்மையினற் கான அரசியல்
அமைப்புக்கொடுத்த பாதுகாப்பை நீக்கியபோது பிரித்தானிய அரசு தலையிட்டிருக்கவேண்டும்.
ஏன் எனில் அவர்கள் விட்டபிழையாலேயே தமிழர் துன்பங்களுக்கு முகம் கொடுத்து
வருகிறார்கள் என்பது அவர்கட்கு காலம் பிந்திக்கிடைத்த ஞானோதயம். கவுரவமாக தன்
பிழையை ஏற்கும் பண்பு இல்லாத அகங்காரம் நிறைந்த அரசாக இருந்ததால் அவர்கள்
தலையிடாமல் அமைதிகாத்தார்கள்.

இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டு வந்தபோது எதிர்க்க வேண்டிய
இந்திய அரசு எதற்கும் தகுதி அற்ற காஷ்மீரப் பிராமணன் நேரு அமைதி காத்ததால்
பல லட்சம் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். இது இந்தியா செய்த இமாலயத்
தவறு நம்பர் ஒன்று. அதன் மேல் நேரு கொத்தலாவலை செய்து கொண்ட ஒப்பந்தம்
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் இரண்டு. சிறிமாவும் சாஸ்திரி செய்து
கொண்ட ஒப்பந்தம் இந்தியா செய்த தவறு நம்பர் மூன்று. இந்திரா காந்தியின்
வழிநடத்தலில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் இறுதி முடிவை அண்மித்த
இராஜதந்திர நகர்வை மேற்கொண்ட ஜி. பார்த்தசாரதியை விலக்கி பிரச்சினையின்
ஆழம் அறியா வடநாட்டுக்காரனான ரொமேஷ் பண்டாரியைக்கொண்டு வந்தது
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் நாலு.

பிரச்சினைகுரியவர்கள் இலங்கைத்தமிழரும் பெரும்பான்மைச்சிங்கள்வரும்மட்டுமே. அப்படியிருக்கையில் பிரச்சினை குரியவர்களை ஒப்பந்தம் போடவைத்து அதை
நடைமுறைப்
படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பைமட்டும் எடுக்க வேண்டிய
இந்தியா தானே ஒப்பந்தக் காரராக மாறியது
இந்தியா விட்ட தவறுகளில்
முதன்மையான இமாலயத்
தவறு.

தமிழர் தாயக நிலம் ஈழத்தமிழரால் கைப்பற்றப்பட்டு தனி ஆட்சி நடத்திவந்த கால
நிலையில் அவர்கள் ஆட்சியை மாநில ஆட்சியாக ஏற்றுத்தமிழர்களுக்குரிய உரிமைகள்
பெற ஆவனசெய்யவேண்டிய இந்தியாவும் தார்மீக கடமை உள்ள பிரித்தானியாவும்
போராடிச்சுதந்திரம் பெற்று சுதந்திரதேவி சிலையைநிறுவிய அமெரிக்காவும்
தமிழர்களுக்குரிய உரிமைகளைக்கொடுங்கள் என நிற்பந்திக்க வேண்டிய கடப்பாடு உடை
யவர்கள் நீதிக்குப்பிறம்பான முறைகளில் ஈடுபட்டு தமிழர் 30 வருடங்களாகக்கட்டி
எழுப்பிய கட்டுமானங்களை
அழித்து முந்தியநிலையிலும் கீழான அடிமைநிலைக்கு
இட்டுச்சென்ற கொடுமையை யாரிடம் முறையிடமுடியும்.

ஒரு சிறு இனத்தின் சுதந்திரதாகத்தை அடக்கி முற்றாக அழிக்க அகில உலகம்
ஒன்று சேர்ந்தவிந்தை ஈழப்
போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் அரங்கேறி
யிருக்கிறது.உலகவரலாற்றில் ஒரு சிறு இனக்குளுமத்தை அழிக்க 20 நாடுகள்
(பகைமை நாடு அடங்கலாக)
கூட்டுச்சேர்ந்த புதுமை 2009ம் ஆண்டில் ஈழத்தில்
நிகழ்ந்திருக்கிறது.

வாயளவில் தார்மீகம் பேசும் காந்திதேசம் தான் செய்த மாபெரும் துரோகத்தின்
பலன்களை வெகு விரைவில்
அனுபவிக்கும் போது தான் ஈழ விடுதலைப்போராளி
களையும் அதன் கட்டமைபையும் அழித்த தவறை உணரும் ஆனால் அது காலங்கடந்த
ஞானோதய
மாகும்.எந்த ஈழப்போராளிகளால் தன் இந்திய தேசியம் உடைந்துவிடும் எனத்தப்புக்கணக்குப்போட்டு அழித்தார்களோ அவர்கள் களத்தில் இல்லாததால்தான்
வேறொரு ஆதிக்க
சக்தியால் இந்தியா பல துண்டுகளாக உடைவதைப்பார்த்து
செய்வதறியாது தானே தன் தலையில் மண்
அள்ளிப்போட்டதை நினைந்து ரத்தக்
கண்ணீர் வடிப்பார்கள்
இது சத்திய வாக்கு.

இலங்கையில் நடந்த போரில் தனிச்சிங்களப்படை நேரடியாகத்தமிழர் படையுடன்மோதி
வெற்றிவாகை சூடியிருந்தால் அதைச்சிறிலங்காப்படையின் வெற்றி என ஆரவாரப் பட்டிருக்கலாம்

ஒரு சிறிய இனக்குழுமத்தை அழித்தொழிக்க ஆதிக்க நாடுகள் எல்லம் ஒன்று சேர்ந்து
உலகத்திலுள்ள சகல
போர் ஆயுதங்களைக்கொண்டு நீதி அற்ற படுபாதகமான இன
அழிப்பு
ப்போரை நடத்தி முடித்து விட்டு தங்கள் கைகளில் உள்ள இரத்தக்கறையைக்
கழுவவும் முடியாமலும் மறைக்கவும் முடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்

ஈழப்போரில் வெற்றியடைந்தவர்கள் ஈழத்தமிழர் அன்றி வேறு யாரும் இலர்.

சொல்லொண்ணாத்துயர் அனுபவிக்கும் முள்வேலி மக்களின் ஒட்டு மொத்தத் துயரம்
ஊழித்தீயாய்
ஒன்று திரண்டு அழிக்கப்புறப்படும் போது அதன் தாக்கத்தால் அழியப்போவது
சிங்களமும் சிங்களத்திற்கு முண்டு கொடுத்த 20 நாடுகளும் மட்டுமே.

கல்லறைகளில் துயில் கொள்ளும் பல ஆயிரம் இளந் தமிழர்களின் ஆத்மா அன்றுதான்
சாந்தி அடையும். அதேநேரம் ஈழவிடுதலை- துளிர் முளைக்கும் நாளும் அந்நாளே.

Friday, August 14, 2009

கல்லூரிக்காலம்- பாகம். 3

அன்றுதான் அவள் ஈஸ்வரனை அண்ணா எனவிளித்த
தை முதன்முதல் பாஸ்கரன்அறிந்து கொண்டான்.
பத்மினியின் கேழ்விக்குநவநீதன் சொன்னான் ஈஸ்வரன்
அன்று கல்லுரிக்கு வரவில்லை என்ற தகவலை.அதன்
மேல் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ரஸ்தாபந்தன்
என்ற நூலை க் கட்டி இன்று முதல் நீங்கள் எல்லாரும்
என் அண்ணாக்கள் என்று பத்மினி கூறினாள்.அவளின்
இக்கூற்றைக்கேட்ட பாஸ்கரனின் முகம் இருண்டு
போய்விட்டது.பத்மினி போகுமுன் பாஸ்கர்அண்ணா
இன்றுமாலை ஈஸ்வர் அண்ணாவையுங்கூட்டிக்கொண்டு
என் வீட்டுக்கு வாருங்கள் என்றுஅழைப்பைவிடுத்துவிட்டு
அவள் போய்விட்டாள். அவள் அவ்விடம் விட்டுப்போன்
பின்பு பாஸ்கரனின் மனதில் அன்று ஈஸ்வரன் சொன்ன
நல்ல புத்திமதிகள் ஒவ்வொன்றும் நிஞாபகத்திற்கு வந்தன.
ஈஸ்வரன்சரியாகத்தான் சொன்னான் நான்தான் முட்டாள்
தனமாகஏதேதோ கற்பனையில் மிதந்திருக்கிறேன்.நல்ல
காலம் பத்மினியிடம் ஏதும் தப்பாக உளறுமுன் விழித்துக்
கொண்டேன்என நினைத்துஆறுதல் அடைந்தான்.

பத்மினி கேட்டுக்கொண்ட மாதிரி பாஸ்கரனால் ஈஸ்வரனைக்
கூட்டிச்செல்லமுடியவில்லை. காரணம் நவநீதனின் உபதேசத்
தால் ஈஸ்வரனுடன்பேசுவதைகடந்த பத்து நாட்களுக்கு முன்
நிறுத்திவிட்டான். ஈஸ்வரன் மனதில் பாஸ்கரன் தன்னுடன்
பேசுவதைநிறுத்திக்கொண்டது கடும் வலியைதந்தபோதும் காலம்
மாறும் அவன் புத்தி சரிவந்ததும் தன்னுடன் பேசுவான் அதுவரை
பொறுமையைக் கடைப்பிடிப்போம் என நினைந்து அவனும்
பேசாமல் இருந்துவிட்டான்.

பரிட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கு முன்பு வருகினற
வெள்ளிக்கிழமைமாலைஎல்லோருக்கும் ஒரு பிரியாவிடை
நிகழ்சியைப் பள்ளிக்கூடநிறுவாகம் ஒரு இசைக்கச்சேரியுடன்
ஒழுங்கு செய்துள்ள தகவல் அறிவிக்கப் பட்டது.அதே போல்
அந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த இசை நிகழ்சியில்
எல்லோரும் பங்குபற்றினார்கள்.இசைகச்சேரிஆரம்பித்த பின்
ஈஸ்வரன்தனிமையை நாடி ஒருவகுப்பறைக்குள் நுளைந்தான்.
அவன் உட்புகுந்த வகுப்பறை இரு பகுகளாகப்பிரிக்கப்பட்டு தனித்
தனியா இரு பகுதிகளாகஇயங்கியது.ஒரு தட்டிதான் தடுப்பாகக்
கட்டப்பட்டிருந்தது.
மற்றப்பகுதியில் ஈஸ்வரன் போல் தனிமையை நாடிவந்தபாஸ்கரன்
மேசையில் தலையைக்கவிழ்ந்துகொண்டுஆழ்ந்த யோசனையில்
மூழ்கியிருந்தான்.அடுத்தபகுதியில்நுளையும் போதே
பாஸ்கரன் இருந்தநிலையைஈஸ்வரன் கவனித்துக்கொண்டான்.
அவ்விடத்தில் வேறு யாரும் இல்லாததால்ஈஸ்வரன் பின்வரும்
பாடலை பாடத்தொடங்கினான்.

" நினைகூரும் நினைகூரும் நினைந்த்வுடன் வாரும் என்னிடம்
நினைகூரும் நினைகூரும்.
நண்பர் நம்மிடைக்கோபம் நாமறியாதுற்றபோதும் நாம் அதைப்
பாராது ஒன்று சேரவேண்டும் நினைகூரும் நினைகூரும்
பள்ளிக்கூடம் விட்டல் பின்பு பார்க்கென்று பட்டால் பல பல
நினைந்த அந்தப்பவளமான நேரத்தை நினைகூரும் நினைகூரும்
பத்மினி என்ற பேதை நம்மிடைப்பரவாமல்விட்டால் பாஸ்கரனே
நீயே என் பல மான நண்பன் நினைகூரும் நினைகூரும்."

கடைசி வரிகள் பாடிமுடியும் போது வில்லில் இருந்து புறப்
பட்ட அம்புபோல் தட்டியைவிலக்கிகொண்டுஓடிவந்து ஈஸ்வரனைக்
கட்டித்தழுவினான் பாஸ்கரன். இருவர்கண்களிலிருந்துகண்ணீர்
வழிந்தோடியது. மூடியதிரை அகன்றதுநண்பர்கள் இருவரும் ஓர்
உயிர் ஈர் உடலானார்.
நட்பு என்றும் தோற்றதாக சரித்திரம் இல்லை.


Tuesday, August 11, 2009

கல்லூரிக்காலம்- பாகம்.2

இந்நிலையில் புதிதாக ஒரு அழகான்
மாணவிஇவர்கள் வகுப்பில் சேர்ந்து
கொண்டார்.அவள் அழகில்மட்டுமல்ல
படிப்பிலும் ஒரு சூடிகையானமாணவி
யாகத்திகழ்ந்தாள். இவார்கள் வகுப்பு ஒரு
கையெழுத்துப்பிரதி இலக்கிய சஞ்சீகை
வெளியிடத்தீர்மானித்தது.வெளியிட உள்ள
சஞ்சீகைக்குஇணைஆசிரியர்களாக ஈஸ்வர
னும் அந்த புதிதாகவந்த மாணவி பத்மினி
யும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.இந்தக்கல்
லூரியிலும் ஈஸ்வரனின் பாட்டுத்திறன் பல
நண்பர்களையும் கலா ரசிகர்களையும்பெற்றுக்
கொடுத்திருந்தன.

சஞ்சீகை விடயமாக ஈஸ்வரனும்பத்மினியும்
பழகத்தொடங்கியதும் அவர்களிடையே
நல்ல நட்பு துளிர்விட ஆரம்பித் தது.
பாஸ்கரனும் ஈஸ்வரனும் எல்லப் பாடங்
களிலும் திறமையாகச் செய்வதால் பாடங்க
ளில் யாருக்கு சந்தேகம் வந்தாலும் இவர்க
ளிடம் உதவி கேட்டுப்பெறுவார்கள். பத்மினி
தன் சந்தேகங்களை ஈஸ்வரனிடம் அல்லது
பாஸ்கரனிடம் கேட்டுத்தெரிந்து கொள்வாள்.
இதனால் பத்மினிக்கும் பாஸ்கரனுக்கும் நல்ல
நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் பாஸ்கர
னுக்கு பத்மினிமேல் ஒருஈற்பு எற்படத்தொடங்
கியது.

இதைக் கவனித்த ஈஸ்வரன் பாஸ்கரனிடம்,
“நண்பா நாங்கள் ஏன் இந்தக்கல்லூரியில் சேர்ந்
தோம் என்பது நிஞாபகம் இருக்கிறதா எனவும்
க.பொ.த வில் சித்தி அடைந்தால்தான் எங்கள்
எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்ஆகையால்
வீண்கற்பனைகளுக்கு இடங்கொடாமல் படி”
எனஅறிவுரை கூறினான். ஈஸ்வரன் அவ்விடத்தை
விட்டு அகன்றதும் நவநீதன் பாஸ்கரனிடம் வந்து
பாஸ்கர் நான் ஒன்று சொல்லுவேன் நீ சண்டைக்கு
வந்துவிடாதே, நான் அவதானித்ததில் பத்மினி
உன்னில் ஈடுபாட்டுடன் இருப்பதுபோல் தெரிகிறது.
ஈஸ்வரன் பத்மினி தன்னுடன் மட்டும்தான் நட்பாய்
இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் அதனால்
தான் உன்னை அவளுடன் பழக வேண்டாம்என்
கிறான் எனப் பல சொல்லி பாஸ்கரன் மனத்தில்
ஒருசிறு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.

இந்த பதின்ம வயதில் பெண்ணிடம் ஏற்படும்
ஈற்புச்சக்தி பலம் வாய்ந்தது.அதனால் பாஸ்கரன்
நவநீதனின் போதனையால் பத்மினியின் கவனத்
தைப் பெறும் முயற்சியில் ஈடுபடலானான்.இதனால்
நண்பர் இருவரிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள்
ஏற்படத்தொடங்கினது. பாஸ்கரனுக்கு ஈஸ்வரன்
மேல் கோபம் ஏற்படத் தொடங்கியது. இந்த மன
உளச்சலை நவநீதன் சரியாகப்பயன் படுத்திக்
கொண்டான்.பாஸ்கரனின் மனநிலையை எடை
போட்ட ஈஸ்வரன்சிறிது விலகி இருந்தால் எல்லாம்
சரியாகிவிடும்என எண்ணி பாஸ்கரனுடன் தனியே
இருக்கும் சந்தற்பத்தைக் குறைத்துக்கொண்டான்.

பத்மினி மனதில் எந்த சலனமும் இல்லததால்
அவள் எப்போதும் போல் இருவருடனும் பழகிக்
கொண்டாள்.அந்த வாரம் வந்த புதன்கிழமை
சிறிது தாமதமாகக் கல்லுரிவந்த பத்மினி பாஸ்கரன்
நவநீதன் முதலான நண்பர்களிடம் வந்து ஈஸ்வர்
அண்ணா எங்கே என்று கேட்டாள்.
(இதன் இறுதிப்பாகம் 14/08/2009 பிரசுரமாகும்)

Sunday, August 09, 2009

[கல்லூரிக்காலம்] பாகம்-1.

பாஸ்கரனும் ஈஸ்வரனும் இணைபிரியா
நண்பர்கள் ஒன்றாகவே நாலாம் வகுப்
பிலிருந்து க.பொ.த வகுப்புவரை சேர்ந்து
படித்து வந்தவர்கள். இருவருமே
படிப்பில் சூடிகையான மாணவர்கள். இருவர்
குடும்பமும் செல்வாக்கு பெற்ற வசதியான
குடும்பங்கள். ஈஸ்வரனின் அப்பா ஒரு வழக்
கறிஞர் பாஸ்கரனின் அப்பா ஒரு வியாபார
நிறுவனத்தின் அதிபர்.

ஈஸ்வரனும் பாஸ்கரும் நல்ல குணநலங்கள்
பெற்றசிறந்த மாணவர்கள். கல்லூரியிலும்
ஊரிலிலும் இவர்களின் இணை பிரியா நட்பு
வெகு பிரசித்தம்.கல்லூரியில் நடைபெறும்
விளையாட்டுப்போட்டி,கவிதைப்போட்டி,
கட்டுரைப்போட்டி என்று எல்லாப்போட்டி
களிலும் இந்த இரு நண்பர்களும் பங்குபற்று
வார்கள் பரிசும் பெறுவார்கள். இவர்களுக்கிடை
யேஆனபோட்டி ஆரோக்கியமான போட்டி
யாகவேஇருக்கும். ஒருவருக்குஒன்றென்றால்
மற்றவர் துடித்தெழுவார். ஈஸ்வரன் முறையாக்
சங்கிதம் கற்றவன் அத்துடன்நல்லகுரல் வழமும்
பெற்றவன். அதனால் அவனைப்பாடச்சொல்லி
அவன் பாடலை ரசிப்பதர்க்கென்று ஒரு கூட்டம்
அந்த கல்லூரியில் உண்டு.
கல்லூரி முடிந்தபின்பு கடக்கரையிலும் பூங்காவி
லும் நண்பர்கள் கூடுவார்கள் பல பல பேசி மகிழ்
வார்கள். மாலையானதும் வீடு திரும்பிவிடுவார்
கள்.காலம் உருண்டோடியது கல்லூரியின் கடைசி
வகுப்பான க.பொ.த வின் பரீட்சை எழுதும் நேரமும்
வந்த து பரீட்சைக்கு இரு நாட்களுக்கு முன் திடீரென
ஈஸ்வரன் சுகவீனமுற்றான் அவனால் பரிட்சை
எழுதமுடிய வில்லைஈஸ்வரன் வைத்தியசாலை
யில் அனுமதிக்கப்பட்டான்அவனை பார்க்கும்
பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்ட பாஸ்கரன்
பரீட்சயைத்தவற விட்டான். இருவரும்பரிட்சையைத்
தவறவிட்டதால் அடுத்தவருடமும் அதேவகுப்பில்
இருக்கவேண்டிய நிலை வந்த து. இளம் மாணவர்
களுடன் சேர்ந்து படிக்க விரும்பாத தால் இருவரும்
பட்டணத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரு
வரும்சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். அங்கும்
இவர்களின்இணைபிரியா நட்பு பிரசித்தமானது.
இவர்களுடன் நவநீதன் என்றொரு மாணவன் படித்து
வந்தான். அவன் இவர்களுடன் நட்பாகப் பழக விரும்
பினான்.ஆனால் ஈஸ்வரனும் பாஸ்கரனும் நவநீத
னின் சில கூடாத நண்பர் களுடனுள்ள உறவால்
அவனை தங்கள் நட்புவட்டத்தில் சேர்த்டுக்கொள்ள
வில்லை. இது நவநீதன்மனதில் இவர்கள் மீது கடும்
சினத்தை எற்படுத்தியது.தருணம் பார்த்துஇவர்களைப்
பிரித்துவிடுகிறேன்என மனதினுள் கறுவிக்கொண்டான்.

(இதன் அடுத்த பாகம் 2009/08/12ல் வெளிவரும்)