இந்த உலகில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒர் இடம் அதை ஆளும்
உரிமை இவைகளுக்காகபோராடி வருகின்றார்கள்.முதலாம் யுத்தம்
ஏற்படுவதற்கு முன்பு இருந்தநாடுகளின் எண்ணிக்கை யுத்தம் முடிந்ததும்
பல புதிய நாடுகளின் வரவால் உயர்ந்தது. அதன் பின்பு இரண்டாவது உலக
மகாயுத்தம் ஏற்பட்டு முடிவடைந்ததும் மேலும் பல நாடுகள் புதிதாகத் ஏற்பட்டன.
எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால் முன்பு மூன்று அல்லது நான்கு இனங்கள்
சேர்ந்து ஒரு நாடாக வாழ்ந்துவந்த நாடு தனித்தனி இனங்களுக்கான் நாடாகப்பிரிவு
பெற்றுப் புதுநாடுகளாக விரிவடைந்தன.
ஒவ்வொரு இனமும் அடிமைநிலையிலிருந்து சுதந்திர நாடாகப் பரிணமிக்கப்
பலவருடங்களாகப்போராடி வருகின்றன். அந்தப்போராட்டங்களை அந்த இனங்களை
அடக்கி ஆளும் அரசாங்கங்கள் பல அடக்குமுறைகளைப் பிரயோகித்து எதிர்த்து
வருகினறன. அப்படி இருந்தும் பல நாடுகள் தனித்தோ அல்லது வேறு ஒரு
பலம்வாய்ந்த நாட்டின் உதவியுடனோ சுதந்திர நாடாகப்பரிணமிக்கின்றன்.
பல்லாயிரம் வருடங்களாக தம்மை ஆண்ட ஈழத்தமிழர் ஆங்கில ஏகாதிபத்தியத்திடம்
இழந்த இறமையை மீட்க கடந்த 60 வருடங்களாகப்போராடி வருகிறார்கள். முதன்
முறை இலங்கைஅரசு ஆங்கிலேயர் வழங்கிய சிறுபான்மையினற் கான அரசியல்
அமைப்புக்கொடுத்த பாதுகாப்பை நீக்கியபோது பிரித்தானிய அரசு தலையிட்டிருக்கவேண்டும்.
ஏன் எனில் அவர்கள் விட்டபிழையாலேயே தமிழர் துன்பங்களுக்கு முகம் கொடுத்து
வருகிறார்கள் என்பது அவர்கட்கு காலம் பிந்திக்கிடைத்த ஞானோதயம். கவுரவமாக தன்
பிழையை ஏற்கும் பண்பு இல்லாத அகங்காரம் நிறைந்த அரசாக இருந்ததால் அவர்கள்
தலையிடாமல் அமைதிகாத்தார்கள்.
இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டு வந்தபோது எதிர்க்க வேண்டிய
இந்திய அரசு எதற்கும் தகுதி அற்ற காஷ்மீரப் பிராமணன் நேரு அமைதி காத்ததால்
பல லட்சம் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். இது இந்தியா செய்த இமாலயத்
தவறு நம்பர் ஒன்று. அதன் மேல் நேரு கொத்தலாவலை செய்து கொண்ட ஒப்பந்தம்
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் இரண்டு. சிறிமாவும் சாஸ்திரி செய்து
கொண்ட ஒப்பந்தம் இந்தியா செய்த தவறு நம்பர் மூன்று. இந்திரா காந்தியின்
வழிநடத்தலில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் இறுதி முடிவை அண்மித்த
இராஜதந்திர நகர்வை மேற்கொண்ட ஜி. பார்த்தசாரதியை விலக்கி பிரச்சினையின்
ஆழம் அறியா வடநாட்டுக்காரனான ரொமேஷ் பண்டாரியைக்கொண்டு வந்தது
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் நாலு.
பிரச்சினைகுரியவர்கள் இலங்கைத்தமிழரும் பெரும்பான்மைச்சிங்கள்வரும்மட்டுமே. அப்படியிருக்கையில் பிரச்சினை குரியவர்களை ஒப்பந்தம் போடவைத்து அதை
நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பைமட்டும் எடுக்க வேண்டிய
இந்தியா தானே ஒப்பந்தக் காரராக மாறியது இந்தியா விட்ட தவறுகளில்
முதன்மையான இமாலயத் தவறு.
தமிழர் தாயக நிலம் ஈழத்தமிழரால் கைப்பற்றப்பட்டு தனி ஆட்சி நடத்திவந்த கால
நிலையில் அவர்கள் ஆட்சியை மாநில ஆட்சியாக ஏற்றுத்தமிழர்களுக்குரிய உரிமைகள்
பெற ஆவனசெய்யவேண்டிய இந்தியாவும் தார்மீக கடமை உள்ள பிரித்தானியாவும்
போராடிச்சுதந்திரம் பெற்று சுதந்திரதேவி சிலையைநிறுவிய அமெரிக்காவும்
தமிழர்களுக்குரிய உரிமைகளைக்கொடுங்கள் என நிற்பந்திக்க வேண்டிய கடப்பாடு உடை
யவர்கள் நீதிக்குப்பிறம்பான முறைகளில் ஈடுபட்டு தமிழர் 30 வருடங்களாகக்கட்டி
எழுப்பிய கட்டுமானங்களை அழித்து முந்தியநிலையிலும் கீழான அடிமைநிலைக்கு
இட்டுச்சென்ற கொடுமையை யாரிடம் முறையிடமுடியும்.
ஒரு சிறு இனத்தின் சுதந்திரதாகத்தை அடக்கி முற்றாக அழிக்க அகில உலகம்
ஒன்று சேர்ந்தவிந்தை ஈழப்போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் அரங்கேறி
யிருக்கிறது.உலகவரலாற்றில் ஒரு சிறு இனக்குளுமத்தை அழிக்க 20 நாடுகள்
(பகைமை நாடு அடங்கலாக) கூட்டுச்சேர்ந்த புதுமை 2009ம் ஆண்டில் ஈழத்தில்
நிகழ்ந்திருக்கிறது.
வாயளவில் தார்மீகம் பேசும் காந்திதேசம் தான் செய்த மாபெரும் துரோகத்தின்
பலன்களை வெகு விரைவில் அனுபவிக்கும் போது தான் ஈழ விடுதலைப்போராளி
களையும் அதன் கட்டமைபையும் அழித்த தவறை உணரும் ஆனால் அது காலங்கடந்த
ஞானோதயமாகும்.எந்த ஈழப்போராளிகளால் தன் இந்திய தேசியம் உடைந்துவிடும் எனத்தப்புக்கணக்குப்போட்டு அழித்தார்களோ அவர்கள் களத்தில் இல்லாததால்தான்
வேறொரு ஆதிக்க சக்தியால் இந்தியா பல துண்டுகளாக உடைவதைப்பார்த்து
செய்வதறியாது தானே தன் தலையில் மண் அள்ளிப்போட்டதை நினைந்து ரத்தக்
கண்ணீர் வடிப்பார்கள் இது சத்திய வாக்கு.
இலங்கையில் நடந்த போரில் தனிச்சிங்களப்படை நேரடியாகத்தமிழர் படையுடன்மோதி
வெற்றிவாகை சூடியிருந்தால் அதைச்சிறிலங்காப்படையின் வெற்றி என ஆரவாரப் பட்டிருக்கலாம்
ஒரு சிறிய இனக்குழுமத்தை அழித்தொழிக்க ஆதிக்க நாடுகள் எல்லம் ஒன்று சேர்ந்து
உலகத்திலுள்ள சகல போர் ஆயுதங்களைக்கொண்டு நீதி அற்ற படுபாதகமான இன
அழிப்புப்போரை நடத்தி முடித்து விட்டு தங்கள் கைகளில் உள்ள இரத்தக்கறையைக்
கழுவவும் முடியாமலும் மறைக்கவும் முடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஈழப்போரில் வெற்றியடைந்தவர்கள் ஈழத்தமிழர் அன்றி வேறு யாரும் இலர்.
சொல்லொண்ணாத்துயர் அனுபவிக்கும் முள்வேலி மக்களின் ஒட்டு மொத்தத் துயரம்
ஊழித்தீயாய் ஒன்று திரண்டு அழிக்கப்புறப்படும் போது அதன் தாக்கத்தால் அழியப்போவது
சிங்களமும் சிங்களத்திற்கு முண்டு கொடுத்த 20 நாடுகளும் மட்டுமே.
கல்லறைகளில் துயில் கொள்ளும் பல ஆயிரம் இளந் தமிழர்களின் ஆத்மா அன்றுதான்
சாந்தி அடையும். அதேநேரம் ஈழவிடுதலை- துளிர் முளைக்கும் நாளும் அந்நாளே.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல சமயத்தில் இறையருள் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. காரணம் உங்களுடைய பங்களிப்புகளை பார்த்த போது நான் மனதிற்குள் வைத்துக்கொண்டுருக்கும் இலங்கை பிரச்சனை குறித்து அப்படமான படித்து மிகப் பரவசமானேன். தொழில் நுட்பம் குறை காரணமாக புதிய இடுகை இன்னும் முடிக்க வேண்டிய விஷயங்களுடன்.
குறிப்பாக இது இலங்கை குறித்து சேகரித்து வைத்துக்கொண்டுருக்கும் விசயங்களுக்காக.
நீங்கள் மேனன் குறித்து சொன்ன நிகழ்வு உண்மை. என்னுடைய புதிய இடுகையில் தாங்கள்( நண்பர்கள்) இணைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு சற்று பெருமை. வாழ்த்துக்கள்.
http://deviyar-illam.blogspot.com/
texlords@gmail.com
Post a Comment