Tuesday, August 11, 2009

கல்லூரிக்காலம்- பாகம்.2

இந்நிலையில் புதிதாக ஒரு அழகான்
மாணவிஇவர்கள் வகுப்பில் சேர்ந்து
கொண்டார்.அவள் அழகில்மட்டுமல்ல
படிப்பிலும் ஒரு சூடிகையானமாணவி
யாகத்திகழ்ந்தாள். இவார்கள் வகுப்பு ஒரு
கையெழுத்துப்பிரதி இலக்கிய சஞ்சீகை
வெளியிடத்தீர்மானித்தது.வெளியிட உள்ள
சஞ்சீகைக்குஇணைஆசிரியர்களாக ஈஸ்வர
னும் அந்த புதிதாகவந்த மாணவி பத்மினி
யும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.இந்தக்கல்
லூரியிலும் ஈஸ்வரனின் பாட்டுத்திறன் பல
நண்பர்களையும் கலா ரசிகர்களையும்பெற்றுக்
கொடுத்திருந்தன.

சஞ்சீகை விடயமாக ஈஸ்வரனும்பத்மினியும்
பழகத்தொடங்கியதும் அவர்களிடையே
நல்ல நட்பு துளிர்விட ஆரம்பித் தது.
பாஸ்கரனும் ஈஸ்வரனும் எல்லப் பாடங்
களிலும் திறமையாகச் செய்வதால் பாடங்க
ளில் யாருக்கு சந்தேகம் வந்தாலும் இவர்க
ளிடம் உதவி கேட்டுப்பெறுவார்கள். பத்மினி
தன் சந்தேகங்களை ஈஸ்வரனிடம் அல்லது
பாஸ்கரனிடம் கேட்டுத்தெரிந்து கொள்வாள்.
இதனால் பத்மினிக்கும் பாஸ்கரனுக்கும் நல்ல
நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் பாஸ்கர
னுக்கு பத்மினிமேல் ஒருஈற்பு எற்படத்தொடங்
கியது.

இதைக் கவனித்த ஈஸ்வரன் பாஸ்கரனிடம்,
“நண்பா நாங்கள் ஏன் இந்தக்கல்லூரியில் சேர்ந்
தோம் என்பது நிஞாபகம் இருக்கிறதா எனவும்
க.பொ.த வில் சித்தி அடைந்தால்தான் எங்கள்
எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்ஆகையால்
வீண்கற்பனைகளுக்கு இடங்கொடாமல் படி”
எனஅறிவுரை கூறினான். ஈஸ்வரன் அவ்விடத்தை
விட்டு அகன்றதும் நவநீதன் பாஸ்கரனிடம் வந்து
பாஸ்கர் நான் ஒன்று சொல்லுவேன் நீ சண்டைக்கு
வந்துவிடாதே, நான் அவதானித்ததில் பத்மினி
உன்னில் ஈடுபாட்டுடன் இருப்பதுபோல் தெரிகிறது.
ஈஸ்வரன் பத்மினி தன்னுடன் மட்டும்தான் நட்பாய்
இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் அதனால்
தான் உன்னை அவளுடன் பழக வேண்டாம்என்
கிறான் எனப் பல சொல்லி பாஸ்கரன் மனத்தில்
ஒருசிறு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.

இந்த பதின்ம வயதில் பெண்ணிடம் ஏற்படும்
ஈற்புச்சக்தி பலம் வாய்ந்தது.அதனால் பாஸ்கரன்
நவநீதனின் போதனையால் பத்மினியின் கவனத்
தைப் பெறும் முயற்சியில் ஈடுபடலானான்.இதனால்
நண்பர் இருவரிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள்
ஏற்படத்தொடங்கினது. பாஸ்கரனுக்கு ஈஸ்வரன்
மேல் கோபம் ஏற்படத் தொடங்கியது. இந்த மன
உளச்சலை நவநீதன் சரியாகப்பயன் படுத்திக்
கொண்டான்.பாஸ்கரனின் மனநிலையை எடை
போட்ட ஈஸ்வரன்சிறிது விலகி இருந்தால் எல்லாம்
சரியாகிவிடும்என எண்ணி பாஸ்கரனுடன் தனியே
இருக்கும் சந்தற்பத்தைக் குறைத்துக்கொண்டான்.

பத்மினி மனதில் எந்த சலனமும் இல்லததால்
அவள் எப்போதும் போல் இருவருடனும் பழகிக்
கொண்டாள்.அந்த வாரம் வந்த புதன்கிழமை
சிறிது தாமதமாகக் கல்லுரிவந்த பத்மினி பாஸ்கரன்
நவநீதன் முதலான நண்பர்களிடம் வந்து ஈஸ்வர்
அண்ணா எங்கே என்று கேட்டாள்.
(இதன் இறுதிப்பாகம் 14/08/2009 பிரசுரமாகும்)

No comments: