Tuesday, September 29, 2009

நகைச்சுவை:- ஜ. நா வின் கணக்கெடுப்பு

2005 ம் ஆண்டு அய் நா உலகம் முழுவதும் ஒரு
கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில்
உலகின் மற்றப் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப்
பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்று உங்கள்
உண்மையான அபிப்பிராயத்தைத்தெரிவியுங்க்ள்
என்று கேட்டிருந்தார்கள்.

அந்த அவர்களின் கணக்கெடுப்பு பெரும் தோல்வி
யைச்சந்தித்தது.

ஆபிரிக்காவில் உள்ளவர்களுக்கு "உணவு " என்
றால் என்ன என்று தெரியவில்லை.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு "உண்மை" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

அ ய்ரோப்பாவில் உள்ளவர்களுக்கு "பற்றாக்குறை"
என்றால் என்ன என்று தெரியவில்லை.

சீனாவில் உள்ளவர்களுக்கு "அபிப்பிராயம்" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

மத்தியகிழக்கில் உள்ளவர்களுக்கு "தீர்வு" என்றால்
என்ன என்று தெரியவில்லை.

தென் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு " தயவு"
என்றால் என்ன என்று தெரியவில்லை.

அமெரிக்கர்களுக்கு " உலகின் மற்றப்பகுதி" என்
றால் என்ன என்று தெரியவில்லை.

Monday, September 28, 2009

கடவுள், காதல், பணம் அழகு என் பார்வையில்

அரூபமான கடவுள், கலப்படமில்லாக் காதல், விரட்டிப் பிடிக்கும் பணம், ஆராதிக்கும் அழகு.

மற்றுமொரு தொடர் பதிவு.

பலர் எழுதி விட்டார்கள் சிலரின் விளக்கம் என்னையும்
விளக்கங்கொடுக்கத்தூண்டியது. அதனால் யாரும் அழைக்
காமலே தொடரில் நுளைகிறேன் வரவு எப்படியிருக்குமோ
நான் அறியேன்.

முதலில் கடவுள்.

எம்மை மீறிய ஒரு சக்தி தொழில்படுகிறது. அது கடவுளா
இல்லையா. சிலர் இயற்கை என்கின்றனர். வேறு சிலரோ
சட்டதிட்டங்களுக்காக கடவுளைக்கொண்டுவந்தார்கள்
என்கின்றனர்.ஆசாரம் மிக்க இந்துக் குடும்பம் என்பதால்
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால்
இன்று 50,000 மக்களைக்காப்பாற முடியாத கடவுள் இருந்
தால் என்ன இருக்காவிட்டால் என்ன என்றாயிற்று
யாருக்கும் தீமைசெய்யாது சத்தியவந்தனாக வாழ்ந்தால்
கடவுளைத்தேட வேண்டியஅவசியமில்லை.

காதல்.

காமம் கலந்ததுதான் மானிடக்காதல். ஒருசிலர் தெய்வீகக்
காதல் என்பர். உடல் சங்கமத்தை நாடும் காதல் எப்படிதெய்
வீகக்காதலாகும். காதல் ஒரு பருவத்தில் இன்றியமையா
தது.வாழ்வில் காதல் வந்து போனது ஆனால் பாதிப்பு அடை
யவில்லை. நான் என் மனைவியை ஆழமாக நேசிக்கிறேன்.

பணம்.

இந்த உலகையே ஆட்டிப்படைப்பது இந்தப்பணமே.இது
இல்லாவிட்டால் ஒரு அணுவும் அசையாது. பணத்தைத்
தேடி ஓடும் ஓட்டம் பலருக்கு கலாசாலைப்படிப்பு முடிந்
ததும் தொடங்கிவிடுகிறது பணத்தைத்தேடி ஓடுவதில்
இளமையைத்தொலைத்து முதுமைவரும்வரை ஓய்வில்லா
ஓட்டமாகிறது. இவர்கள் வாழ்கையை அனுபவிப்பதில்லை.
ஒரு சிலர் வசதியான பின்னணியில் வாழ்கையை ஆரம்
பிப்பதால் ரசித்து அனுபவித்து வாழ்கிறார்கள். பணம்
எனக்கு என்றும் பிரச்சினையாக இருந்ததில்லை.மற்ற
வர்களுக்கு உதவ எனக்குப் பணம் தேவைப்படுகிறது.
அதனால் அதை நோக்கிய பயணம் தொடர்கிறது. இருந்
தும் நான் திருப்தியாக வாழ்கிறேன்.

அழகு.

மனநிலையைப் பொறுத்ததுதான் அழகு.அழகை ரசிக்க
நுண்ணிய மனம் வேண்டும். கலாரசிகனாலேயே அழகை
ஆராதிக்கமுடியும். குழந்தையின் சிரிப்பு எல்லோருக்கும்
அழகாகவே தோன்றும்.யார் அழகு ஆணா அல்லது பெண்ணா
எனக்கேட்டால் காவியங்கள் பெண்ணை அழகு என வர்ணித்
தாலும் ஆண்தான் அழகு. சிற்பி சிலை வடிவம் கொடுக்கும்
போது ஆண் சிலையை நிர்வாண மாகவேபடைப்பவன். துகில்
சுற்றியே பெண்ணைப்படைக்கிறான். நிர்வாணத்தில் ஆண்
தான் அழகனாகிறான். இதுதான் உண்மை

இந்தத்தொடர் பதிவு பல கோணங்களை எடுத்து வருகிறது.
அப்படி இருந்த போதிலும் நான் யாரையும் அழைக்கவில்லை
விரும்புபவர்கள் தொடரலாம். விடைபெறுகிறேன்.


Saturday, September 26, 2009

ஒரு தந்தையின் கோரிக்கை

இன்று காலையில் எனக்கு வந்த e-mail லைத்திறக்கை
யில் ஒரு தொடர் ஈ மெயில் என்னை வெகுவாகப்பா
தித்துவிட்டது. அது ஆங்கிலத்தில் இருப்பினும் அதை
அப்படியே பகிர்ந்து கொள்ளவிளைகிறேன். ஒரு ஆபிரிக்க
இளைஞன் 29 வயது மணம் முடித்து இனிமையாகச்
சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் காதல்
வாழ்வின் சின்னமாய் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
குழந்தைக்கு பத்து மாதம் நிறைகையில் அக்குழந்தைக்கு
மூளையில் ஒரு கட்டி இருப்பதாக அவர்களின் டாக்டர்
கூறுகிறார். குழந்தை பிழைக்கவேண்டுமென்றால் ஒரு
ஆப்பிரேசன் என்கிற சத்திர சிகிச்சை செய்யவேண்டும்.
அதர்க்கு அவர்களுக்கு நிறையப்பணம் தேவை. ஆனால்
அவர்களோ ஏழைகள். இந்த நிலையில் A O L ம் Zdnet
என்கின்ற இரு நிறுவனங்களும் உதவி செய்ய முன்
வந்தன. தந்தையை ஒரு கவிதையை எழுதி ஈ மெயில்
முலம் அனுப்பும்படியும் அந்த ஈமெயில் எத்தனை பேர்
திறக்கிறார்களோ அதைக்கணக்குப்பண்ணி ஒவ்வொருவ
ரும் மூன்று பேருக்கு அனுப்பினால் அதற்கு 32 சதம் சிம்பா
புவே பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
அந்த தந்தை எழுதிய கவிதை என் மனதை நிரம்ப வருத்தி
யது ஒவ்வொரு தந்தையையும் இது தட்டி எழுப்பும் என்பது
என் நம்பிக்கை. அப்பாடலை ஆங்கிலத்தில் உள்ளபடியே
கீழே தந்திருக்கிறேன். அவர்களின் ஈ மெயில் தேவைப்
ப்டுபவர் என்னுடன் தோடர்பு கொண்டால் அனுப்பிவைப்
பேன். என்து ஈ மெயில் mthevesh@gmail.com.
A sad Dad's poem..........
This is a beautiful poem. There is an appeal from a Zimbabwean couple at the bottom of message, not asking for anything more than that you hand the poem on............
The husband wrote the poem.



TO MY CHILD



Just for this morning, I am going to
smile when I see your face and laugh
when I feel like crying.

Just for this morning, I will let you

choose what you want to wear,
and smile and say how perfect it is.


Just for this morning, I am going to step

over the laundry and pick you up and take you to
the park to play.



Just for this morning, I will leave the
dishes in the sink, and let you teach me how to put
that puzzle of yours together.



Just for this afternoon, I will unplug
the telephone and keep the computer off, and sit with
you in the backyard and blow bubbles.



Just for this afternoon, I will not yell
once, not even a tiny grumble when you scream and
whine for the ice cream truck, and I will buy you one
if he comes by.


Just for this afternoon, I won't worry
about what you are going to be when you grow up, or
second guess every decision I have made where you are
concerned.



Just for this afternoon, I will let you
help me bake cookies, and I won't stand over you
trying to fix them.



Just for this afternoon, I will take us
to McDonald's and buy us both a Happy Meal so you can
have both toys.....



Just for this evening, I will hold you in
my arms and tell you a story about how you were
born and how much I love you.



Just for this evening, I will let you
splash in the tub and not get angry.
Just for this evening, I will let you



stay up late while we sit on the porch and count all the stars.
Just for this evening, I will snuggle

beside you for hours, and miss my favourite TV shows.

Just for this evening when I run my
finger through your hair as you pray, I will simply be
grateful that God has given me the greatest gift ever given.


I will think about the mothers and
fathers who are searching for their missing children, the
mothers and fathers who are visiting their children's
graves instead of their bedrooms. The mothers
and fathers who are in hospital rooms

watching their children suffer senselessly and screaming
inside that little body


And when I kiss you goodnight I will hold

you a little tighter, a little longer. It is then,
that I will thank God for you, and ask him for
nothing, except one more day.................




Hi! I am a 29-year-old father. My wife and I have had a wonderful life together.. God blessed us with a child too. Our daughter's name is Rachel and she is 10 months old. Not long ago did the doctors detect brain cancer in her little body....

There is only one way to save her and that is an operation. Sadly we don't have the money for the operation. AOL and Zdnet (in Zimbabwe ) have agreed to help us.

The only way they can help is this: If you send this email to other people<>AOL will track this email and count how many people get it. Every person that opens this email and sends it to at least 3 people will give us 32c. (in Zimbabwe dollars) Please help us.





It hardly takes a minute for you to forward this to your friends, Please do it.


God Bless You!!

Saturday, September 19, 2009

ஈழத்தமிழரிடம் மாற்றம் தேவை

ஈழ்த்தமிழர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமெனில்
பல விடயங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். முதல் தேவை
யானமாற்றம் அளவுக்கதிகமான சுயநலத்திலிருந்து மட்டுப்
படுத்தப்பட்ட சுயநலத்திற்கு மாறவேண்டும்.பொதுநலம் பே
ணப்படவேண்டும்.சமுதாய விழிப்பு ஏற்படவேண்டும்.எனக்
கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே என்ற சுயநலநோக்கு
ஒழிக்கப்படவேண்டும். யார்குத்தி அரிசியானாலும் சரி தமிழ
ருக்கு விடிவு வேண்டும் என்ற மனநிலை எல்லாத்தமிழரிட
மும் ஏற்படவேண்டும்.ஈழத்தமிழரிடம் இன்றுவரை ஏற்படா
த முக்கியவிடயமானஒற்றுமை முதலில் ஏற்படவேண்டும்.
முதன்முதலில் Crab Mentality என்று சொல்லப்படுகிற மனப்
பான்மையில் இருந்து விடுபடவேண்டும்.

கனடா நாட்டுக்குவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்சி
காரர் மூலம் கனடா வந்து சேர்ந்தவர்களே. அப்படி வந்து சேர்ந்த
ஒருவர் தான் வந்து சேர்ந்ததும் குடியேற்ற அதிகாரிகளிடம் என்ன
சொன்னார் என்பதை இப்போது கீழே தருகிறேன்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர். அவரை அனுப்பி
வைத்த ஏஜென்சிக்காரன் அவரிடம் ரொரன்ரோ விமான
நிலையம் அடைவதற்கு 40 ந்மிடங்கள் இருக்கையில் உங்
கள் பிரயாணப்பத்திரத்தை அழித்துவிட்டு விமான் நிலையம்
அடைந்த்தும் அகதிநிலை கோருங்கள் எல்லாம் நல்லமுறை
யில் முடியும் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதன் படி
இவர் எது வித பிரச்சினையும் இன்றி விமான்நிலையம்
அடைந்தார். ஆனால் ஏஜென்சிகாரன் சொன்னமாதிரி
ஆவணங்களை அழிக்கவில்லை. இவர் முறை வந்து குடி
வரவு அதிகாரியிடம் விபரம் தெரிவிக்கும் போது அவர்
பிரயாணஞ்செய்த பிரயாண அட்டையை அவரிடங்கொ
டுத்து இதில் என் படத்தை ஒட்டி அனுப்பிவைத்தார்கள் இப்ப
டித்தான் ஏஜென்சிகாரர் ஆட்களை அனுப்பிவைக்கிறார்
கள் என்று விளக்கங்கொடுத்தார். அதன் அர்த்தம் என்ன
வென்றால் நான் பிரச்சினை இல்லாமல் வந்துசேர்ந்து
விட்டேன் இனிமேல் யாரும் வரத்தேவையில்லை என்ற
மனப்பான்மைதான். இந்தச்சுயநலம் ஒழிக்கப்படவேண்டும்.

இன்னுமொருசம்பவம் கீழே தருகிறேன் அதையும் பாருங்
கள். நாலு தமிழரை ஒரு ஏஜென்சிக்காரன் அனுப்பிவைத்
தான் அவர்கள் வரும் வழியில் ஒரு விமானநிலையத்தில்
ஒருவரை மறித்துக்கொண்டு மற்றமூவரையும் மேற்
கொண்டு போக அனுமதித்தார்கள். தடுக்கப்பட்டவர் தப்பி
போறவர்கள் போகட்டும் என்று பெருந்தன்மையாய் நினைக்
கவில்லை அந்த அதிகாரியிடம் அவர்கள் மூவரையும் விட்ட
நீ ஏன் என்னை மட்டும் மறிக்கிறாய் என்று மற்றவர்களை
யும் காட்டிக்கொடுத்து அவர்கள் பிரயாணத்தையும் தடுத்து
விட்டார். அவரின் சுயநலப்போக்கால் மற்ற மூவரும் நஷ்டப்
படவைத்துள்ளார் அல்லவா. இதுமாதிரி பல சம்பவங்கள்
நிறைய எழுதலாம். இந்த சுயநல மனப்பான்மை இல்லாது
ஒழிக்கப்படவேண்டும்.

ஒரு சமுதாயம் சுதநதிரம் பெறவேண்டுமானால் அந்தச்ச
முதாயம் முதலில் ஒற்றுமையாகச்செயல்படவேண்டும்.
ஈழத்தமிழரிடம் இல்லாத ஒன்று ஒற்றுமைப்படமுடியாததாகும்.
அன்று செல்வநாயகம், பொன்னம்பலம் &சுந்தரலிங்கம்
போட்டிபோட்டார்கள். அதன் பின்பு பிரபாகரன் மற்றப்
போராளிக்குழுக்கள் போட்டிபோட்டார்கள். இன்று
டக்ளஸ், கருணா, பிள்ளையான், விடுதலைக்கூட்டு
முன்னணி என்று போட்டிபோடுகிறார்கள்.இவற்றை
சரியாகப்புரிந்து கொண்டதால சிங்கள தலைவர்கள்
பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்து தங்கள் நிகழ்ச்சி
நிரல்படிகாரியங்களை ஆற்றிவருகிறார்கள்.

ஒற்றுமை இல்லாததால் இலங்கையில் ஈழத்தமிழரின் இருப்
பு கேள்விக்குறியாக மாறிவருகிறது. இவ்வளவுதூரம் அழிவு
ஏற்பட்டபின்பும் இன்னும் ஈழத்தமிழரிடையே ஒற்றுமை
ஏற்படவில்லையே. புலம்பெயர்ந்த தமிழரிடையேகூட
ஒற்றுமை இல்லை என்பது மிக்கவேதனையாக இருக்கிறது.
எல்லாரும் ஒன்று சேர்ந்தால் முள்வேலிக்குள் அடைபட்ட
மக்களுக்காவது விடுதலையை வேண்டிக்கொடுக்கலாம்.
ஈழத்தமிழரின் இருப்புக்கு ஏதாவது வழிசெய்ய வாய்ப்பு
ஏற்படும் என்பதையும் உறுதியாகக்கூறலாம்.ஈழத்தமிழரே
விழியுங்கள் ஒற்றுமையாகுங்கள் உங்கள் உறவுகளின்
சுதந்திரத்திற்கும் நல்வாழ்வுக்கும் ஆவனசெய்யுங்கள்.

Thursday, September 03, 2009

யார் மானத்தமிழர்

நேற்று ஸ்காபரோ சென்ரர்லில் உள்ள வால் மாட் கடைக்குச்
சில பொருட்கள் வாங்கச்சென்றிருந்தேன். வாங்க வேண்டி
யவற்றை வாங்கிக்கொண்டு வெளியேறும் போது எனது
இந்திய நண்பர் சேகரைச்சந்தித்தேன். என்னைக்கண்டதும்
என்ன ஈஸ்வர் சார் செளக்கியமா என்றார். நானும் நான்
நலமாக இருக்கிறேன். எப்படி உங்கள் சுகங்கள் வீட்டில்
எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா என விசாரித்தேன்.
அவரும் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்றார்.
நான் சரி வாருங்கள் காப்பி சாப்பிடுவோம் எனக்கூப்பிட்
டேன். அவரும் சரி என்று என்னுடன் வந்தார். அருகிலுள்ள்
ரிம் கோட் டனில் காப்பி வங்கிகொண்டு அந்த கடைக்கு
முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு
எங்கள் பேச்சைத்தொடர்ந்தோம்.
சேகர்:- சேர் நீங்களும் உங்களின் ஆட்களும் தான் உண்மை
யான தமிழர், நாங்கள் எங்களைத்தமிழர் என்று சொல்ல
முடியாது. நாங்கள் எல்லாம் சுத்த கோழைகள் எங்களிடம்
மருந்துக்குக்கூட வீரம் கிடையாது.
நான் :- ஏன் அப்படிச்சொல்லுகிறிர்.
சேகர்:- நீங்கள் எல்லோரும் தன்மானம் மிக்கவர்கள்,உஙகளிடம்
மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, சமுதாயப்பற்று
முதலியன இருக்கின்றன.காக்கைக்கூட்டம் போல் உங்களுக்
கு ஒன்றென்றால் எல்லோரும் ஒன்று கூடி ஆர்ப்பட்டம்,
கதவடைப்பு, ஊர்வலம் என்று உங்கள் ஒற்றுமையைக்
காண்பிக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் நினைத்தால்
பெருமையாக இருக்கிறது. ஆனால் ஒருவிசயத்தில்
உங்கள் எல்லோர் மீதும் எனக்கு கோபமும் வருத்தமும்
இருக்கிறது.
நான் :- என்ன விசயத்தில் கோபம் எதற்கு மனவருத்தம்.
சேகர் :- நீங்கள் யாரையும் மன்னிக்க மாட்டேன் என்று அடம்
பிடிக்கிறீர்கள்.
நான் :- இல்லைச்சேகர் நீங்கள் எங்களைத்தப்பகப் புரிந்து கொண்டீர்
கள். நாங்கள் துரோகத்தையும் துரோகி களையும் தான் மன்னிப்
பதில்லை. எதிரியை அறுபத்தைந்து வீதம் மன்னித்து விடுகிறோம்
ஏன் மிகுதி முப்பைத்தைந்து வீதம் வைத்துக்கொள்கிறோம் என்றால்
அவன் மறுபடி தப்பு பண்ணாமல் இருக்கிறானா என் எச்சரிக்கையாக
இருக்கிறோம்.
சேகர்:- நீங்கள் என்ன சமாதானம் சொன்னலும் நாங்கள் மன்னித்து மறந்து
விடுவோம்.
நான் :- சேகர் அப்படி மன்னித்து மறந்து விடுவதால்தான் உங்கள் அரசியல்
வாதிகள் கடந்த அறுபது வருடங்களாக மறுபடி மறுபடி உங்கள்
தலையில் மிளகாயை அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சேகர் :- தமிழனுக்கு முகவரி கொடுத்ததே ஈழத்தமிழன் தான். உங்களால்
தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்துவிடும் என்று பல மாக நம்பினேன்
சார். ஆனால் எல்லாம் தவிடுபொடியாகிப்போய் விட்டது. பயாபரா
மாதிரி தோற்றுவிட்டது.
நான் :- சேகர் நீங்கள் சொல்வது தப்பு பயாபரா முற்று முழுசாகத் தோற்க
வில்லை. அந்தப்பிரச்சினையை அடக்க முற்பட்ட நைஜீரிய அரசு
பல மாநிலங்களாகப்பிரித்து அந்தந்த பிராந்திய மக்களுக்கு மாநில
சுயாட்சி வழங்கி விட்டது. இப்போது பயாபரா மக்களும் மாநில
ஆட்சியில் நிம்மதியாகவாழ்கிறார்கள்.
சேகர் :- இது நாள் வரை இச்செய்தி எனக்கு தெரியாமல் போய்விட்டது.
நான் :- சேகர் எந்த ஒரு இனத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி விட
முடியாது. அதனால் ஈழவிடுதலை தோற்கவில்லை. தற்போ
தைக்கு உள்ள சூழநிலையால் அடங்கிப் போனது போல் தோற்றம்
அளிக்கிறது. காலம் கனிந்து வரும்போது மறுபடி ஆர்ப்பரித்து
எழும் விடுதலையை அடையும். கவலையை விடுங்கள்.
இத்துடன் எங்கள் பேச்சை முடித்துக்கொண்டு விடைபெற்றோம், அவர்
தன் வழி போனார் நான் என் வீடு வந்து சேர்ந்தேன். நல்லது நண்பர்களே
உங்கள் அபிப்பிராயங்களைத்தெரிவியுங்கள். மறுபடி சந்திப்போம்.