Wednesday, October 28, 2009

மூத்தவன் படும் பாடு-பாகம்-1

எமது யாழ் தமிழ் சமுதாயத்தில் காலம் காலமாகக்
கடைப்பிடிகும் தவறான சம்பிரதாயம் என்னவென்
றால் என்ன கஷ்டப்பட்டாலும் தாய் தந்தையரை
மூத்தபிள்ளைதான் பராமரிக்கவேண்டும் என்ற கடப்
பாடு.நான்கு அல்லது ஜந்து பிள்ளைகளைப்பெறும்
ஒரு தந்தை தன் குடும்ப பாரத்தைச்சுமக்க மூத்த பிள்
ளை த் தொள்கொடுக்கும்படிநிர்ப்பந்திக்கிறார். அதனால்
மூத்தபிள்ளை மேல்ப் படிப்பு படிக்கமுடியாமல் ஏதோ
ஒரு வேலைக்குப்போய்விடுகிறான். அவனின் உழைப்
பால் குடும்பம் ஓட்டப்படுகிறது. அவனுக்குக்கீழ் உள்ள
வர்கள் மேலேபடிக்கமுடிகிறது அவர்கள் பட்டதாரியா
கிறார்கள் கூடிய சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துவிடுகி
றார்கள். ஆனால் பாதிப்படிப்புடன் குடும்பத்திற்கு உதவப்
புறப்பட்டவன் மேலே உயரப்போகமுடியாமல் குறைந்
தசம்பளத்தில் ஏழ்மையில் உழல்வான்.
வாலிப வயது 21ல் இல்லற இன்பத்தில் திளைத்து வரி
சையாய் ஜந்து பிள்ளைகளைப்பெறும் அப்பன் தனது
தேவைக்குத் தோழ்கொடுத்த மூத்தபையனுக்கு இள
மை கழிந்து 38 வயது வந்த பின்னும் அவன் மணவாழ்க்
கையைப்பற்றிச்சிந்தியாது வாழாது இருப்பார். கடைசியில்
இந்த மூத்தபையன் தன் வெட்கத்தைவிட்டு எப்ப எனக்
குப்பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று கேட்டபின்பு தான்
அவசரம் அவசரமாக ஒரு பெண்ணைப்பிடித்து, அவனுக்
குப்பிடிக்குதோ அல்லபிடிக்கவில்லையோ எதுவும் கேட்
காமல் கட்டிவைத்துவிடுவார்கள். பிடிக்கவில்லை என்
று மறுப்புத்தெரிவித்தால் நீ எங்க சொல் கேட்பாய் என்ற
நம்பிக்கையில் நாங்கள் வாக்குக்கொடுத்து விட்டோம்
ஆகையால் நீ கலியாணம் செய்யாவிடில் எங்களை நீ
உயிரோடு பார்க்கமுடியாது நாங்கள் தூக்கில் தொங்கி
விடுவோம் என்று பிளாக் மெயில் பண்ணி கட்டிவைத்
து விடுவார்கள்.அவன் அதிர்ஷ்டம் செய்தவனாக இருந்
தால் வருகிற பெண் அவனுக்கேற்ற மனைவியாய் அமை
ந்து விடுகிறாள். வாழ்நாள் பூராவும் அவனுக்குத்தோள்
கொடுக்கும் தோழியாய் அவனுக்கு நின்மதியைக்கொ
டுப்பாள். அப்படி இல்லாமல் ஒரு பிசாசாக அல்லது
பிடாரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்நாள் முழு
வதும் நரகவேதனையைஅனுபவித்தே ஆகவேண்டும்.
சில நேரங்களில் மானம் போய் துகில் உரிந்த நிலையில்
அவமானப்பட்டுச்சீரழிந்துபோய் நடைப்பிணமாக வாழும்
நிலையை அடைகிறான்.
இந்த மூத்தவன் உதவியால் இன்று மேல் நிலைக்கு வந்த
இவனின் தம்பிமார் அண்ணா கஷ்டப்படுகிறானே என்று
அனுதாபம் காட்டமாட்டார்கள். அவன் படிக்கிற காலத்தில்
படிக்காமல் போனது அவன் தப்பு அல்லவா அதனால்தான்
கஷ்டப்படுகிறான் என்று காரணம் சொல்வார்கள். ஏழ்மை
யில் உழன்றாலும் அவன்கூடத்தான் அப்பா அம்மா வசிக்
கவேண்டும் அதுதானே முறை என்று நியாயம் வேறு
பேசிக்கொள்வார்கள்.
இதன் அடுத்த பாகம்-2 நவம்பர் 3ல் பிரசுரிக்கப்படும்.

No comments: