Thursday, July 30, 2009

[தன்னம்பிக்கையை வளர்த்தல்]

தன்னம்பிகை பற்றி பல புத்தங்கள் வெளிவந்துள்ளன,
அத்தனை புத்தகங்களை வாழ் நாள் முழுவதும் வாசித்
தாலும், தன்னம்பிக்கை தானாக வரும் என்பது
கேழ்விக்குறியே.

நீங்களாக முயற்சி எடுத்தாலே அன்றி தன்னம்பிக்கை
தானாக வரமாட்டாது. தன்னம்பிக்கையைக் கட்டி
எழுப்புவது அவ்வளவு சுலபமும் இல்லை.

தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும் உங்கள் முயற்சி
யில் நீங்கள் பல தவறுகளை விடலாம். அப்படி தவ
றுகள் ஏற்படும் என்பதை நீங்கள் எதிர்பாற்தே இருக்
கவேண்டும்.

எப்படித் துவிச்சக்கர வண்டியை ஓட்டக் கற்கும் போது
பல தடவை கீழே விழுந்து, முழங்காலில் பல சிராய்ப்
புகள் ஏற்பட்ட போதும் மீண்டும், மிண்டும் எழுந்து
வண்டியின் இருக்கையில் ஏறி நீங்கள் ஓட்டக் கற்றுக்
கொண்டிர்கள் அல்லவா. ஒரு நாள் எது விததடுமாற்றமும்
இல்லமல் உங்களால் வண்டி ஓட்டமுடிந்ததுதானே.

தொலைக்காட்சி பாற்பதாலோ பல புத்தங்களை
வாசிப்பதாலோ தன்னம்பிக்கை தானாக வருவதில்லை.

எது தேவையோ அதை நோக்கிய பயணம் தடைபடா
து தொடரவேண்டும் அப்போது அது கைகூடும்.
தன்னம்பிக்கை என்பது பாட நெறியல்ல. அது ஒரு
உணற்சி, மனத்தின் தன்மைதான் அதை தீர்மானிக்
கிறது.ஆகையால் அது சம்பந்தமான உறுதியான
முயற்சி அவர்களிடம் இல்லையானால் யாராலும்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்ப முடியாது.

என்ன வழி முறையில் முயற்சி செய்தால் தன்னம்
பிக்கை உருவாகுமோ அந்த வழியை உணர்ந்து
அதன் வழி செல்லவேண்டும்.

பொன்னோ,
பணமோ கொடுத்து தன்னம்பிக்கை
வாங்க முடியாது. அது கடையில் விற்கும் பொரு
ளும் இல்லை.மருந்துக் கடைகளிலும் கிடைக்கின்ற
பொருளும் அல்ல. அல்லது ஒரு வைத்தியர் ஒரு
குப்பியில் தன்னம்பிக்கை நிரப்பி நாள் ஒன்றுக்கு
மூன்று தரம் சாப்பிடுங்கள் என சீட்டை ஒட்டித்தரக்கூ
டிய பொருளும் அல்ல.

யார் தன்னம்பிக்கையை உங்களுக்குத் தரமுடியும்
என்றால் அவர் வேறு யாரும் இல்லை, நீங்கள்..நீங்கள்
மட்டுமே. உங்களால் மட்டுமே தன்னம்பிக்கையை
ஏற்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் உங்கள்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பக் கைகொடுக்கும்
என்பதை மறந்து விடாதிர்கள்.

எதைச்செய்தால் தன்னம்பிக்கை எற்படும் என்று
கருதுகிறீர்களோ, அதை நோ
க்கி உங்கள்
முயற்சியை ஆரம்பித்தீர்களானால் கட்டாயம்
உங்களால் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பி
தன்னம்பிக்கை நிறைந்தவராக மிளிரமுடியும்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தன்னம்பிக்கை
மிக மிக முக்கிமானது.
[This article give insight to the truth
to build your confidence.]


No comments: