Sunday, August 09, 2009

[கல்லூரிக்காலம்] பாகம்-1.

பாஸ்கரனும் ஈஸ்வரனும் இணைபிரியா
நண்பர்கள் ஒன்றாகவே நாலாம் வகுப்
பிலிருந்து க.பொ.த வகுப்புவரை சேர்ந்து
படித்து வந்தவர்கள். இருவருமே
படிப்பில் சூடிகையான மாணவர்கள். இருவர்
குடும்பமும் செல்வாக்கு பெற்ற வசதியான
குடும்பங்கள். ஈஸ்வரனின் அப்பா ஒரு வழக்
கறிஞர் பாஸ்கரனின் அப்பா ஒரு வியாபார
நிறுவனத்தின் அதிபர்.

ஈஸ்வரனும் பாஸ்கரும் நல்ல குணநலங்கள்
பெற்றசிறந்த மாணவர்கள். கல்லூரியிலும்
ஊரிலிலும் இவர்களின் இணை பிரியா நட்பு
வெகு பிரசித்தம்.கல்லூரியில் நடைபெறும்
விளையாட்டுப்போட்டி,கவிதைப்போட்டி,
கட்டுரைப்போட்டி என்று எல்லாப்போட்டி
களிலும் இந்த இரு நண்பர்களும் பங்குபற்று
வார்கள் பரிசும் பெறுவார்கள். இவர்களுக்கிடை
யேஆனபோட்டி ஆரோக்கியமான போட்டி
யாகவேஇருக்கும். ஒருவருக்குஒன்றென்றால்
மற்றவர் துடித்தெழுவார். ஈஸ்வரன் முறையாக்
சங்கிதம் கற்றவன் அத்துடன்நல்லகுரல் வழமும்
பெற்றவன். அதனால் அவனைப்பாடச்சொல்லி
அவன் பாடலை ரசிப்பதர்க்கென்று ஒரு கூட்டம்
அந்த கல்லூரியில் உண்டு.
கல்லூரி முடிந்தபின்பு கடக்கரையிலும் பூங்காவி
லும் நண்பர்கள் கூடுவார்கள் பல பல பேசி மகிழ்
வார்கள். மாலையானதும் வீடு திரும்பிவிடுவார்
கள்.காலம் உருண்டோடியது கல்லூரியின் கடைசி
வகுப்பான க.பொ.த வின் பரீட்சை எழுதும் நேரமும்
வந்த து பரீட்சைக்கு இரு நாட்களுக்கு முன் திடீரென
ஈஸ்வரன் சுகவீனமுற்றான் அவனால் பரிட்சை
எழுதமுடிய வில்லைஈஸ்வரன் வைத்தியசாலை
யில் அனுமதிக்கப்பட்டான்அவனை பார்க்கும்
பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்ட பாஸ்கரன்
பரீட்சயைத்தவற விட்டான். இருவரும்பரிட்சையைத்
தவறவிட்டதால் அடுத்தவருடமும் அதேவகுப்பில்
இருக்கவேண்டிய நிலை வந்த து. இளம் மாணவர்
களுடன் சேர்ந்து படிக்க விரும்பாத தால் இருவரும்
பட்டணத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரு
வரும்சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். அங்கும்
இவர்களின்இணைபிரியா நட்பு பிரசித்தமானது.
இவர்களுடன் நவநீதன் என்றொரு மாணவன் படித்து
வந்தான். அவன் இவர்களுடன் நட்பாகப் பழக விரும்
பினான்.ஆனால் ஈஸ்வரனும் பாஸ்கரனும் நவநீத
னின் சில கூடாத நண்பர் களுடனுள்ள உறவால்
அவனை தங்கள் நட்புவட்டத்தில் சேர்த்டுக்கொள்ள
வில்லை. இது நவநீதன்மனதில் இவர்கள் மீது கடும்
சினத்தை எற்படுத்தியது.தருணம் பார்த்துஇவர்களைப்
பிரித்துவிடுகிறேன்என மனதினுள் கறுவிக்கொண்டான்.

(இதன் அடுத்த பாகம் 2009/08/12ல் வெளிவரும்)






No comments: