Friday, August 14, 2009

கல்லூரிக்காலம்- பாகம். 3

அன்றுதான் அவள் ஈஸ்வரனை அண்ணா எனவிளித்த
தை முதன்முதல் பாஸ்கரன்அறிந்து கொண்டான்.
பத்மினியின் கேழ்விக்குநவநீதன் சொன்னான் ஈஸ்வரன்
அன்று கல்லுரிக்கு வரவில்லை என்ற தகவலை.அதன்
மேல் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ரஸ்தாபந்தன்
என்ற நூலை க் கட்டி இன்று முதல் நீங்கள் எல்லாரும்
என் அண்ணாக்கள் என்று பத்மினி கூறினாள்.அவளின்
இக்கூற்றைக்கேட்ட பாஸ்கரனின் முகம் இருண்டு
போய்விட்டது.பத்மினி போகுமுன் பாஸ்கர்அண்ணா
இன்றுமாலை ஈஸ்வர் அண்ணாவையுங்கூட்டிக்கொண்டு
என் வீட்டுக்கு வாருங்கள் என்றுஅழைப்பைவிடுத்துவிட்டு
அவள் போய்விட்டாள். அவள் அவ்விடம் விட்டுப்போன்
பின்பு பாஸ்கரனின் மனதில் அன்று ஈஸ்வரன் சொன்ன
நல்ல புத்திமதிகள் ஒவ்வொன்றும் நிஞாபகத்திற்கு வந்தன.
ஈஸ்வரன்சரியாகத்தான் சொன்னான் நான்தான் முட்டாள்
தனமாகஏதேதோ கற்பனையில் மிதந்திருக்கிறேன்.நல்ல
காலம் பத்மினியிடம் ஏதும் தப்பாக உளறுமுன் விழித்துக்
கொண்டேன்என நினைத்துஆறுதல் அடைந்தான்.

பத்மினி கேட்டுக்கொண்ட மாதிரி பாஸ்கரனால் ஈஸ்வரனைக்
கூட்டிச்செல்லமுடியவில்லை. காரணம் நவநீதனின் உபதேசத்
தால் ஈஸ்வரனுடன்பேசுவதைகடந்த பத்து நாட்களுக்கு முன்
நிறுத்திவிட்டான். ஈஸ்வரன் மனதில் பாஸ்கரன் தன்னுடன்
பேசுவதைநிறுத்திக்கொண்டது கடும் வலியைதந்தபோதும் காலம்
மாறும் அவன் புத்தி சரிவந்ததும் தன்னுடன் பேசுவான் அதுவரை
பொறுமையைக் கடைப்பிடிப்போம் என நினைந்து அவனும்
பேசாமல் இருந்துவிட்டான்.

பரிட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கு முன்பு வருகினற
வெள்ளிக்கிழமைமாலைஎல்லோருக்கும் ஒரு பிரியாவிடை
நிகழ்சியைப் பள்ளிக்கூடநிறுவாகம் ஒரு இசைக்கச்சேரியுடன்
ஒழுங்கு செய்துள்ள தகவல் அறிவிக்கப் பட்டது.அதே போல்
அந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த இசை நிகழ்சியில்
எல்லோரும் பங்குபற்றினார்கள்.இசைகச்சேரிஆரம்பித்த பின்
ஈஸ்வரன்தனிமையை நாடி ஒருவகுப்பறைக்குள் நுளைந்தான்.
அவன் உட்புகுந்த வகுப்பறை இரு பகுகளாகப்பிரிக்கப்பட்டு தனித்
தனியா இரு பகுதிகளாகஇயங்கியது.ஒரு தட்டிதான் தடுப்பாகக்
கட்டப்பட்டிருந்தது.
மற்றப்பகுதியில் ஈஸ்வரன் போல் தனிமையை நாடிவந்தபாஸ்கரன்
மேசையில் தலையைக்கவிழ்ந்துகொண்டுஆழ்ந்த யோசனையில்
மூழ்கியிருந்தான்.அடுத்தபகுதியில்நுளையும் போதே
பாஸ்கரன் இருந்தநிலையைஈஸ்வரன் கவனித்துக்கொண்டான்.
அவ்விடத்தில் வேறு யாரும் இல்லாததால்ஈஸ்வரன் பின்வரும்
பாடலை பாடத்தொடங்கினான்.

" நினைகூரும் நினைகூரும் நினைந்த்வுடன் வாரும் என்னிடம்
நினைகூரும் நினைகூரும்.
நண்பர் நம்மிடைக்கோபம் நாமறியாதுற்றபோதும் நாம் அதைப்
பாராது ஒன்று சேரவேண்டும் நினைகூரும் நினைகூரும்
பள்ளிக்கூடம் விட்டல் பின்பு பார்க்கென்று பட்டால் பல பல
நினைந்த அந்தப்பவளமான நேரத்தை நினைகூரும் நினைகூரும்
பத்மினி என்ற பேதை நம்மிடைப்பரவாமல்விட்டால் பாஸ்கரனே
நீயே என் பல மான நண்பன் நினைகூரும் நினைகூரும்."

கடைசி வரிகள் பாடிமுடியும் போது வில்லில் இருந்து புறப்
பட்ட அம்புபோல் தட்டியைவிலக்கிகொண்டுஓடிவந்து ஈஸ்வரனைக்
கட்டித்தழுவினான் பாஸ்கரன். இருவர்கண்களிலிருந்துகண்ணீர்
வழிந்தோடியது. மூடியதிரை அகன்றதுநண்பர்கள் இருவரும் ஓர்
உயிர் ஈர் உடலானார்.
நட்பு என்றும் தோற்றதாக சரித்திரம் இல்லை.


No comments: