Friday, February 26, 2010

RAW வின் ஆட்டம்

அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு
ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு
டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற
அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிறதோ அதே
மாதிரி ஈ அடிச்சான் காப்பி மாதிரிச் செயல் பட
வேண்டும் என்று துடிக்கும் RAW அதிகாரமையம்.
இந்திரா காந்தி ஆட்சிசெய்த காலத்தில் வாலைச்
சுருட்டி வலம்வந்தஇந்தஅமைப்பு. இந்திரா காந்தி
யின் மறைவுக்குப்பின் பிரதமர் கதிரையை அலங்
கரித்த அரசாளலாயக்கு அற்ற ராஜீவ் காந்தி யின்
காலத்தில் நரகாசுரனாகஅசுர வளர்ச்சி பெற்று
யாருக்கும் கட்டுப்படாதஅமைப்பாக கோலோச்சி
வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுடனான
உறவில் விரிசல் ஏற்பட்டதற்கும் வருங்காலத்தில்
ஏற்படுவதற்கும் இந்த ரா அமைப்புதான் முக்கியகார
ணமாகிறது.இந்த அமைப்பு இந்தியாவின் முன்னேற்
றத்துக்குப்பாடுபடாமல் இந்த அமைப்பிலுள்ள முக்கி
ய அதிகாரிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை அமுல்
படுத்துவதிலேயே கண்ணும் கருத்தாகச் செயல் படு
கிறார்கள். இந்த அமைப்பில் உள்ள அதிகாரம் மிக்க
நபர்கள் பெரும்பாலும் கேரளாவைச்சேர்ந்த மலையா
ளிகளே. மலையாளிகள் யாவரும் கம்யூனிச சித்தாந்தத்
தில் ஊறித்திளைப்பவர்கள். பீக்கிங்கில் மழைபெய்தால்
குடைபிடிப்பவர்கள். அவர்களுக்கு தாய்நாட்டு விசுவாசம்
மருந்துக்கும் இல்லாதவர்கள். அவர்களின் கனவெல்லாம்
இந்தியா சீனாவின் ஆளுகைக்கு உட்படவேண்டும் என்பதே.
இந்திரா காந்திக்குப்பின்பு பிரதமர் பதவிக்கு வந்த யாருக்கும்
முதுகெலும்பு இருக்கவில்லை. அதனால் இதைக்கட்டுப்
பாட்டில் கொண்டுவர யாராலும் முடியவில்லை.இந்த அமைப்
பில் உள்ளவர்களுக்கு தேச பக்தி கிடையாது அவர்களிடம்
இருப்பது சீனா மேல் உள்ள பக்தி மட்டுமே. இந்த அமைப்பைக்
கட்டுப்பாட்டில் கொண்டுவராத வரை இந்தியா காலப்போக்
கில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்
சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது.

Monday, November 23, 2009

சாய்பாபாவின் மறுபக்கம் மக்கள் தொண்டு


: * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.
ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம்
ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.
* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனை
யோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத்
தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.
* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள்.
நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப்
பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.
*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம்.
தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து
தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.
* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம்
கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை
காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.
* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனி
யாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக்
கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.
* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி
அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப்
பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.
* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகிய
வற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர்
முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே,
நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.
* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை.
அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக்
கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.
* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன்
நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்
ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.
* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு
நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமை
யைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்ல
வர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.
*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால்
வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ
நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி
உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.
* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்
கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக்
காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நல
மனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.


தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் : பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு
தேவை என்பதை அறிந்த சாய்பாபா பல திட்டங் களை செயல் படுத்தியுள்ளார்.
1994ல் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட் டத்திலுள்ள 750 கிராமங் களில்
வசிக்கும் 9லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் செயல்
படுத்த பட்டது. இதற்கு 284 கோடி ரூபாய் செல விடப்பட்டது. இதற் காக
ஆந்திர அரசின் நிதி பங்களிப்பு எதுவும் கிடையாது. சத்யசாய் டிரஸ்ட் மூலமே
இந்தப் பணம் கொடுக்கப் பட்டது. இந்த திட்டத்தை பிரபல நிறுவனமான லார்சன்
அன்ட் டூப்ரோ அமைத்துக் கொடுத்தது. இந்த திட்டத்தின் விசேஷ அம்சம் என்ன
வென்றால், 9 லட்சம் மக்கள் பயன்பெறும் இந்த திட்டம் எதிர் காலத்தில் மக்கள்
தொகை அதிகரித்தாலும் கூட, அதாவது 12.50 லட்சம் மக்களுக்கு பயன்படும்
வகையில் செயல் படுத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது. 750 கி.மீ., தூரத்துக்கு
மெயின் குழாய்களும், 1550 கி.மீ., தூரத்துக்கு கிளை குழாய்களும் அமைக்கப்
பட்ட இந்த பிரம்மாண்ட திட்டத்தில் 40 ஆயிரம் முதல் 3 லட்சம் லிட்டர் கொள்
ளளவு உடைய 268 மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.ஆன்மிகம்
என்பது பொதுச்சேவையே என்பதை பாபா இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.


ஒன்லி சர்விங்... நோ பில்லிங் : ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியிலும்,
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியிலும் இலவசமாக அனைத்து மருத்துவ உதவி
களையும் வழங்கி வரும் சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இயங்கி
வருகிறது. இங்கு வரும் நோயாளி களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் மனித நேய
உணர்வுடன் சேவை செய்யப்படுகிறது. அனைவருக்கும் முற்றி லுமாக இலவச
மருத்துவ சேவை செய்வது இன்னும் விசேஷம். சாய்பாபாவின் அன்னை
ஈஸ்வரம்மா புட்டபர்த்தியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு
மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம்
தெரிவித்தார். பாபாவும் அம்மாவிடம் சரியான சந்தர்ப்பத்தில் அந்த விருப்பத்தை
நிறைவேற்ற உறுதியளித்திருந்தார். அதன்படி, பிரசாந்தி நிலையத்தில்
1954, நவம்பர் 23ல் இம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு1956ம்
ஆண்டு அக்டோபர் 4ல் திறந்து வைக்கப் பட்டது. தொடக்க காலத்தில்
12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக இருந்தது. 1982
நவம்பர்23ல், நவீனவசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனைக்கு
அடிக்கல் நாட்டப்பட்டு,1984 பிப்ரவரி29ல் தொடங்கப் பட்டது. இதில்
அறுவை சிகிச்சை, ரத்தவங்கி, நவீன லேப்வசதி, தீவிர சிகிச்சை பிரிவு,
எக்ஸ்ரே பிரிவு, கண், பல் மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்
பட்டன. இதன் பிறகு புட்டபர்த்தியின் நுழைவுப் பகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி
ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா 1990 நவம்பர் 22ல் நடந்தது. மிகவும் அதிசயத்
தக்க வகையில், 1991 நவம்பர் 22 ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவால்
மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தொடங்கிய 15வது நிமிடத்தில் முதல் அறுவை
சிகிச்சையும் நடந்தது. மூன்று மணி நேரத்திற்குள்ளாக 4 அதிநவீன அறுவை சிகிச்
சைகள் நடந்து முடிந்தது ஆச்சரியப் படத்தக்கதாக இருந்தது. நாட்டின் பல இடங்
களில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு முன்னணி மருத்துவர்கள் இங்கு
மருத்துவப்பணி செய்கின்றனர். இதய, சிறுநீரக, நரம்பு, கண் சம்பந்தமான
பிரச்னைகளுக்கும் அந்தந்த பிரிவு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.


இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது முதல் 2009 மார்ச் வரை 16 லட்சத்து
96ஆயிரத்து 719 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர். இதய நோய்க்காக
8 லட்சத்து18 ஆயிரத்து 831 நோயாளிகள் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு பார்வையாளராக இங்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம், ""கடவுளின் அருளாட்சி இங்கு நடக்கிறது. இங்கிருக்கும் மருத்துவர்களும்,
பணியாளர்களும் தேவதை களைப் போல இருப்பதை உணர்ந்தேன்'' என்றார்.
இங்கு வரும் நோயாளிகள் "ஒன்லி சர்விங், "நோ பில்லிங்' என்று சொல்லிச்
செல்வதைக் காண முடியும்.

Saturday, November 21, 2009

உயிர் கொடை

உயிர் கொடை என்பது என்ன ? பல கருத்துக்கள் இருக்கின்றன தியாகம், வேள்வி,

மூளைச்சலவை, கொலை,ஈகை இப்படிக்கூறிக்கொண்டே போகலாம். ஈழமக்களின்

உரிமைப் போராட்டக் களத்திலே இந்த உயிற்கொடை எப்படி நோக்கப்படவேண்டும்.

வேள்வி அல்லது தியாகம் என்பதுதான் பொருத்தமாக அமைகிறது. எந்த ஒரு உயிரும்

தெரிந்துகொண்டு உயிரைக் கொடுக்கச் சம்மதிப்பதில்லை. தற்கொலை என்பது கூட

உடனடியாக மனதில் ஏற்படும் சடுதியான முடிவே யல்லாமல் திட்டம் போட்டு யாரும்

தற்கொலை செய்வதில்லை. முயல்பவரின் செயலில் திடிரென ஏற்படும் எதிர்பாராத

தடங்கல் தற்கொலை முயற்சியைக் கைவிடவைக்கிறது. அதனால் அவர் இரண்டாவது

தடவை முயற்சி செய்வதில்லை. கடுமையான மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்கள் மட்டுமெ

மீண்டும் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். மூளைச்சலவை என்பது கூட

நூறு வீதம் சரிவருவதில்லை. பல மனவியாலாளர்களின் கருத்துப்படி எவ்வளவுதான் மூளைச்

சலவை செய்து தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் படுத்தினாலும் அந்நபரின் அடி மன

தில் உள்ள உயிரின் மேலுள்ள ஆசை கடைசிநேரத்தில் அது நடக்காமல் தவிர்த்து

விடுகிறது. ஆகையால் தன் உயிரைத் தற்கொடையாக் கொடுப்பதற்கு நல்லமனத்திடம்

இருக்கவேண்டும். தான் கொடுக்கும் கொடை அவர்கள் மனதில் ஓர் அமைதியைக்

கொடுக்கவேண்டும்.மனமகிழ்சியையும் கொடுத்திருக்கவேண்டும். மூளைச்சலவை மூலம்

அவர் தற்கொலைக்கு வந்திருந்தால் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருப்பார் முயற்சி

தோற்றிருக்கும். கொள்கை ரீதியாக மனதைத் திடப்படுத்தியவர்களால் மட்டுமே தமது

பாரிய பொறுப்பை எவ்வித மனத்தடுமாற்றம் இன்றி தற்கொடையைக் கொடுத்திருக்க

முடியும். ஈழப்போரில் எதிரியானவன் எல்லா வளங்களுடனும் மிகப்பெரிய மனித வலு

வுடனும் களத்தில் நிற்கும்போது வளங்கள் அற்ற சிறு எண்ணிக்கைய்யான மனித

வளத்துடன் உள்ளவர்களால் இந்த உயிர்கொடை மூலமே பாரிய அழிவை கொடுக்க

முடியும் கொடுக்கமுடிந்த து ஒரு தற்கொடையாளி பலவருடம் பல பயிற்சிகளைப்

பெற்றுத் தன்னை தயார் படுத்துகிறான் என்றால் அவன் தான் செய்ய உள்ள கடமையில்

எவ்வளவு காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் தன்

கொடையால் வருங்கால சமுதாயம் சுதந்திரம் பெற்றுச்சுபிட்சமான வாழவைப்

பெறும் என மனப்பூர்வமாக நம்பினதால்தான் அந்த செயலில் எவ்வித தயக்கமும்

இன்றிச்செயல் படுகிறான் செயல் பட்டிருக்கிறான்.

மூளைச்சலவை செய்து பிக்பாக்கற் அடிக்கவைக்கலாம், களவெடுக்கவைக்கலாம்,

மற்றவர்களை ஏச வைக்கலாம், வம்புச்சண்டைக்குப் போகவைக்கலாம், மற்ற ஒரு

உயிரை கொல்ல வைக்கலாம் ஆனால் தன் உயிரைக் கொல்லவைக்க முடியாது.

ஆகையால் மூளைச்சலவை மூலம் தற்கொடைப்போராளி உருவாகிறான் என்பது

வீண் வாதமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

தியாகமும் மனத்திடமும் கொள்கைப்பற்றும் இருந்தால் மட்டுமே ஒருவரால் இந்த

வேள்வியில் ஈடுபடமுடியும், தன்னை ஆகுதி யாக்க முடியும்.

யப்பானியர்களால் இரண்டாம் உலக யுத்த த்தின் போது எதிரி கப்பல்களை அழிக்க

உருவாக்கியதே இந்த தற்கொலைத்தாக்குதல். சில இஸ்லாமியக்குழுக்களால் இந்த

தற்கொலைத் தாக்குதல் பின்பற்றப் பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜிகாத் என்பதும் ஈழத்தமிழரின் தற்கொடைத் தாக்குதல் என்பதும்

ஒன்றாக நோக்கப் படக்கூடாதது. அது வேறு இது வேறு

இதைத் தற்கொடை யாகவும் வேள்வி யாகவும் மிகப்பெரும் உயிர் ஆயுத மாகக்கட்டி

எழுப்பியவர்கள் ஈழத்தமிழ்ப்புலிகள் மட்டுமே.