Tuesday, July 28, 2009

[மனித உரிமைகள்]

உயிர் வாழும் உரிமையை இறைவன் கொடுத்
துள்ளான்.ஆனால்மற்ற உயிர் இன ங்களை
உணவுக்காகவோ அல்லது உல்லா
சத்திற்காகவோ அழிக்கும் கொடுமையை மனி
தன் தன் கையில்எடுத்துக்கொண்டான்.அதே
சமயம் மனிதன் மனிதனை அழிக்காமல்
ஒவ்வொரு நாடும் சட்டங்களின் துணையையே
நாடி வருகின்றன. அவர்கள் மனிதராக இருப்
பதால் அவர்களுக்கு அழிக்கமுடியாத சில உரிமை
கள்இருக்கின்றன. இந்த உரிமைகள் தான்
மற்றவர்களிடமிருந்துஉங்களைத்துன்புறுத்
துவதிலிரிந்தோ அல்லது கொலைசெய்வதில்
இருந்தோ பாதுகாக்கிறது. அந்த உரிமைகள் தான்
மற்றவர்களுடன்சேர்ந்து அமைதியாக வாழ்
வதற்கு வழி அமைக்கின்றன.பெரும்பாலனவர்
களுக்கு இந்த மனித உரிமைகளில் ஒரு சில
மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். அவை
களில் தாங்கள்செய்யும் வேலைக்கு கூலி கொ
டுக்கப்படவேண்டும் என்பதும்தாங்கள் ஓட்டு
அழிக்க உரிமை உள்ளவர்கள் என்பது மட்டுமே

மேற் கொண்டு இருக்கும் உரிமைகள் என்ன
என்னஎன்பதைஅறியாதவர்களாகவே இருக்கி
றார்கள்உங்கள் உரிமை தெரியாத நிலையில்
இனப்பாகுபாடு, சகிப்புத்தன்மை, நீதி அற்ற
தன்மை, அடக்குமுறை மற்றும்அடிமைத்தனம்
முதலியவை தலைதூக்கின்றன.


இரண்டாம் உலகயுத்தம் நடைபெற்றபோது நடந்
த மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும்
மனிதப்பேரழிவுகளின்பின்னர் தோன்றிய ஜக்கிய
நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப் பட்டதே
இந்த மனித உரிமைப்பிரகடனமாகும்.

இப்பிரகடனம் மூலம் இந்த உலகத்தில் வாழும்
சகலரும்சுதந்திரமாகவும், நீதியாகவும்,அமைதி
யாகவும் வாழும்அடிப்படை உரிமையைக்கொண்
டுள்ளார்கள்என்பதைத்தெளிவு படுத்தியது.
மனிதப்பண்பு உலகமெல்லாம் போற்றப்பட
எங்கும் அமைதி தவழ, சுதந்திரமும் நீதியும் உல
கில்நிலைபெற்று ஓங்கிட மனித உரிமைகள் ஏற்
கப்பட்டுப் போற்றப்பட்டு சட்ட பூர்வமான வழி

களில் அவை காக்கப்படவேண்டும் என்பதுதான்
இந்தப்பிரகடனம்.

இதன் முதற்பிரிவு இப்படிக்கூறு
கிறது, “ மனிதர் யாவரும்சம்மே” எனும் சம்த்துவக்
கோட்பாடு மனிதர்களிடையே மதம், பிறப்பிடம்
போன்ற எந்த வகையான அடிப்படையிலும்பாகு
பாடுகள் இருக்க க்கூடாது
அனைவரும் சமம் யாவரும் சகோதரத்துடன்
இணைந்துவாழவேண்டும் என்பதாகும்
உலகில் ஒரே மாதிரியான சட்டம் இருக்க
வேண்டும் என ஜநா எதிர் பார்த்தாலும் ஒவ்
வொருநாடும்தங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி
இந்தச் சட்டத்திற்குவிளக்கம் கொடுக்கிறார்கள்.

ஆசியாவின் மிகப் பெரியசனநாயக நாடு என்று
கூறப்படும் காந்தி தேசம் இதுநாழ்வரை இந்தப்
பிரகடணத்தை ஏற்று கையெழுத்திடவில்லை
என்பது மிக நகைப்புக்கிடமானது.
அதே போல்உலக வல்லரசு என்று சொல்லிக்
கொள்ளும் அமெரிகாவும் இப்பிரகடனத்தை
ஏற்றுக்கொள்ளவில்லை அடுத்தஉண்மையா
கும்.

பெரும் பான்மையான மேலைநாடுகள்
இந்த மனிதஉரிமைசம்பந்தமாக நேர்மையாக
நடப்பதில்லை. தங்கள் நலம்சார்ந்த விடை
யங்களில் மனித உரிமை பற்றி எதுவித கவலை
யையும் அற்றவர் களாகவே செயல் படுகிறார்கள்.

உலகில் பலநாடுகளில் இன்றுவரை மனித உரிமை
மீறல்கள்பற்றிய அதிகமான முறைப்பாடு காவல்
துறை, இராணுவம், சிருடைஅணிந்த துறைகளில்
பணிபுரியும் அலுவலர்கள் செய்த அத்துமீறல்கள்
பற்றியதாகத் தான் இருக்கின்றன. மனித உயிர்கள்
அவசியம் இன்றிக்கொல்லப்படுதல், தேவைஅற்ற
முறட்டுவழிகளில்மனிதர்களைத் துன்புறுத்து
வது, அவமானப்படுத்தப்படுவது ஆகியன சீருடை
அணிந்தவர்களால் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்
றனஎன்பது மிக்க் கசப்பான உண்மையாகும்.
அமைப்பு ரீதியாக திரள்வது, பேச்சுரிமை முதலியன
மறுக்கப்படுகின்றன.

சமிபத்தில் ஜநா செயலாளரின் சிறப்புப்பிரதிநிதி
வெளியிட்டஅறிக்கையில் நில உரிமைகள், இயற்
கை வழங்கள், சுற்றுச்சூழல் முதலான பிரச்சினை
களை கையில் எடுக்கும் மனிதஉரிமைப் போராளி
கள் இன்று அதிகம் ஆபத்தில் உள்ளனர்என்பதைச்
சுட்டிக் காட்டியுள்ளார். மனித உரிமைகளைப்
பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று
உலகெங்குமுள்ளது. செப்ரம்பர் 11 க்கு பின் இது மிக
மோசமாகியுள்ளது.
[This article explain the full components of
of Human Rights and its application.]

No comments: