Saturday, October 10, 2009

புவனேஸ்வரி--சினிமா--நடிகர்சங்கம்

புவனேஸ்வரியின் கைது பத்திரிகைகளின் பிரதிபலிப்பு
நடிகர்சங்கப்போர்கொடி இவை பற்றிய எனது கண்ணோ
ட்டம்.

சினிமா என்பது ஒரு சாக்கடை என்பது பலருக்குத்தெரிந்த
விடையம். விபசாரமும் சினிமாவும் பாலில் கலந்த தண்ணீர்
போன்றது. சினிமாவில் நடக்கும் அந்தரங்களை வெளிக்
கொண்டுவரமுயற்சித்த பத்திரிகை நடத்துவோர் சிலர்
மர்மமானமுறையில் கொல்லப்பட்டதை முதியோர் யாரும்
மறந்திருக்க மாட்டார்கள். எனக்கு மிகப்பழைய பத்திரிகைப்
பிரதி ஒன்று பார்க்கச் சந்தற்பம் கிடைத்தது. அதில் லட்சுமி
காந்தன் என்பவரது கொலை பற்றிய தகவல் இருந்தது. இவர்
இந்துநேசன் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். அவருடை
ய பத்திரிகையில் சினிமா கதாநாயகிகளது அந்தரங்கங்களை
ஆதாரங்களுடன் வெளியிட்டார், அதனால் ஆத்திரம் அடைந்
த சினிமா உலகம் அவரைக்கொலைசெய்து விட்டது. இது
தான் அந்தப்பத்திரிகைசெய்தி.

பத்திரிகைதுறையினர் ஒன்றும் புனிதர்கள் அல்ல. இவர்கள்
பத்திரிகை ஆசிரியர்கள் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு
தாங்கள் நடத்தும் பத்திரிகையை ஆயுதமாகப்பாவித்து தன்
சுய லாபங்களுக்காக அதைப்பாவிப்பவர் கள். உதாரணத்திற்
கு இந்து பத்திரிகை நடத்தும் ராம் என்பவனை எடுத்துக்கொ
ண்டால் ஈழத்தமிழர் பிரச்சினையில் சிறீல்ங்கா அரசிடமிருந்
து பல மில்லியன் பணத்தைப்பெற்றுக்கொண்டு உண்மைக்கு
மாறான ஈழத்தமிழருக்குப் படு பாதகமாக எழுதிவந்த ஒரு
விபச்சாரி. இப்பவும் சிறீலங்கா அரசின் பேறோலில் இருப்ப
வன்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம் இன்று சீரழிந்து போய் இருப்பதற்கு
முழுக்க முழுக்க க் காரணம் விபசாரத்தை முக்கிய தொழிலா
கக்கொண்ட கோடாம்பாக்க சினிமாத் துறையாகும்.
மக்களை மாக்களாக்கினால் தான் அவர்களை அடக்கி ஆள
முடியும் எனத்தெரிந்துகொண்ட திராவிடக்கட்சிகள் சினிமா
என்ற மாயையை தமிழ்நாட்டில் படரவிட்டு எல்லோர் மனத்
திலும் கனவுத்தொழிற்சாலையில் பங்கு பெறவேண்டும்
என்ற வேட்கையை வேர் ஊன்றவிட்டுவிட்டார்கள்.அதனால்
பராம்பரியமான தமிழரின் ஒழுக்கமும் கலாச்சாரமும் அழிந்
து விபசாரிகளைக்கடவுளாகக்கும்பிடக் கோவில் கட்டும்
கலாச்சாரம் தோன்றியுள்ளது.

முந்திய காலங்களில் சினிமா ஒழுக்கக்கேடு நிறைந்த இட
மாகக் கணிக்கப்பட்டதால் குலப்பெண்கள் சினிமா பக்கம்
தலைவைத்துப்படுப்பதில்லை. ஆனால் இன்று சிலபடித்த
பெண்கள் அது சாக்கடை என்பது தெரிந்தும் சேர்வதால்
சினிமா ஒழுக்கம் நிறைந்த இடம் என்ற மாயையை ஏற்
படுத்தி வருகிறார்கள்.

ஈழத்தமிழரிடையே சினிமா மோகம் என்றும் இருந்தது
இல்லை.சினிமா ஒரு பொழுதுபோக்குச்சாதனம் என்ற
அடிப்படையில் அதை வரவேற்றார்கள்.ஈழத்தமிழ்
நாட்டில் இந்தக் கனவுத்தொழிற்சாலை அவர்கள்
மத்தியில் ஏற்படவில்லை. அதனால் சினிமா மோகம்
அல்லது சினிமாப்பைத்தியம் யாருக்கும் ஏற்படவில்லை.
அத்துடன் ஈழமக்கள் நூறு வீதம் கல்வி அறிவு பெற்றவர்
களாக இருந்ததால் சிறப்பான தொழில்களைச்செய்து வாழ்
வில் மேல் நிலைக்கு ச்சென்றார்கள். கனவுத்தொழிற்சாலை
யை நம்பி தங்கள் வாழ்க்கையை அழிக்கவேண்டிய தேவை
யை அவர்களுக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை.

சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்சீரழிவைக் கண்டு கொண்
ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன் ஆளுகைக்குட்பட்டபிர
தேசங்களில் தமிழ் நாட்டு ஆபாசச்சினிமாவை முற்றாகத்தடை
செய்திருந்தார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில்
வாழ்ந்த தமிழ் ஈழ இளைஞர்கள் யாரும் சினிமா கதாநாயகிகளை
தங்கள் கனவுக்கன்னி என்று அறிவிக்க வில்லை.

ஆனால் இப்போது புலி ஆட்சி ஒழிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்கா
ல ஈழ நாட்டு இளைஞர் சிலர் தமிழ்நாட்டுச்சினிமா நாயகிகளைத்
தங்கள் கனவுலக்கன்னி என்று வெளி வெளியாக அறிவிக்கிறார்
கள். இன்னும் ஒரு சிலர் மேலும் ஒரு படி மேலே போய் த்திரையில்
தங்கள் கனவுக் கன்னி தோன்றும் போது தங்கள் ஆண் உடம்பு
விளித்துக்கொள்வதாக க்குறிப்பிடுகிறார்கள். இந்நிலை குறித்து
ஒவ்வொரு யாழ் தமிழனும் வெட்கப்படவேண்டும்.

சினிமா நாயகிகள் நடத்தை கெட்டவர்கள் அவர்களைத் தங்களுடன்
இணைத்துக்கதைத்தால் தங்கள் மானம் போய்விடும் என்று அஞ்சி
ய பரம்பரை இன்று தன் வாரிசுகள் அதே விபச்சாரிகளைக் கனவுக்
கன்னி என்து விளிப்பது குறித்து வெட்கப்பட்வேண்டும்.

அது பழையகாலம் இது புதிய காலம் அதனால் பரத்தையாய்ப் போ
ன நாயகிகள் இன்று கற்புக்கரசியாக மாறிவிட்டார்களா?
அப்படி மாறியிருந்தால் புவனேஸ்வரிகள் தோன்றவேண்டிய
தேவை ஏற்பட்டிருக்காதல்லவா?

சாக்கடை சாக்கடைதான் என்றும் புனித கங்கையாக மாறமுடி
யாது.

No comments: