Wednesday, October 21, 2009

தீபாவழிச்சிறப்பு நிகழ்ச்சி

விஜே தொலைகாட்சியில் சுப்பர் சிங்கர் என்ற சிறப்புத்
தீபாவழி நிகழ்ச்சி நடத்தியிருந்தார்கள்.அதன் ஒளிப்ப
திவை 16/10/2009 ல் பார்த்து ரசித்தேன். சின்னக்குழந்தை
கள் தங்கள் குடும்பத்துடனசேர்ந்து நிகழ்சிகளை அளித்தார்
கள்.மிகத்திறமையாகவும் நன்றாகவும் அந்தக்குழந்தைக
ளின் நிகழ்ச்சி அமைந்திருந்தது. குழந்தைகளின் திறமை
யைக்காணும் யாவரும் மகிழ்ச்சியே கொள்வார்கள். நானும்
ரொம்ப் ரொம்ப ரசித்து மகிழ்ந்தேன்.

நிரம்பச்சிறுவயதிலேயே பாடலின் ராகத்தை உணர்ந்து தாளம்
தப்பாமல் இனிமையை மேம்படுத்திப்பாடியது வெகுவாகப்
பாராட்டப்படவெண்டியதே. ஒரு சில குழந்தைகளுக்கு கர்னா
டக சங்கீத ப் பயிற்சி இருந்தது. வேறு சிலர் கேழ்வி ஞானத்து
டன் பாடுபவர்களாக இருந்தார்கள். இவர்களைத்தேர்ந்தெடுத்
டு முறையாகப்பாடலைப்பாடப் பயிற்சி கொடுத்து அவர்களின்
திறமையை வெளிக்கொண்டு வந்த விஜே தொலைக்காட்சி
நிறுவனத்தினர் பாராட்டப்படவேண்டியவர்களே.

அதே போல் சிறுவர் சிறுமியரின் நடனம் என்கின்ற நாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரதம் என்கின்ற நாட்டியம்
இல்லாமல் பெரும்பாலும் குத்துப்பாடலுக்குரிய டான்ஸ்
மூவ் மென்ரே மேடை ஏற்றியிருந்தார்கள். மைக்கல்
ஜாக்சன் அசைவைப்பின்பற்றி பிரபு தேவா SEX MOVEMENTS
தமிழ் சினிமாவில் தன் நடனங்கள் மூலம் அறிமுகப்படுத்தி
னார். அன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தபோது தமிழரின்
பரதம் என்கின்ற நாட்டிய முறையை மேற்கத்தைய அசைவு
நிறைந்த குத்துப்பாட்டு நடனம் சூறையாடி விடுமோ என்ற
சந்தேகம் என் மனதில் தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை.

பாடல்களைத்தேர்ந்தெடுத்துப்பாடும்போது இருவர் பாடும்
பாடல்கள் வரும்போது இரு நண்பர்கள் பாடும் பாடல் அல்லது
இரு தோழியர் பாடும் பாடல்கள் அல்லது பொதுவான பாடல்
கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

டூயற் பாடல்களை அப்பவும்பெண்ணும், அம்மவும்
பையனும், அண்ணனும் தங்கையும் பாடுவதைத்
தவிர்த்திருகலாம், தற்கால இளைஞர்களைத் தவிர்த்து
மத்திய வயதினருக்கு பாடப்படும் டூயற் பாடல் வரிகளின்
அர்த்தம் புரியும் போது பாடுபவர்கள் யார் யார்
எனக்கவனிக்கும் போது சிறிது மனக்கிலேசத்தையும்
சங்கடத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.

சினிமா பின்ணணி பாடுபவர்கள் முன்புபோல் சேர்ந்து
பாடாமல் அவரவர் TRACK ஜ தனித்தனியாகவந்து பாடிப்
போவதால் அண்ணனும் தங்கையும் காதல் ரசம் ததும்
பும் டூயற் பாடல் பாடுவது பெரும் பிரச்சினையாகத்
தோன்ற வில்லை.

கலைநிகழ்ச்சிகளில் இருவர் டூயற் பாடல் பாடும் போது
உறவு முறை யைத்தவிர்த்துப்பாடுவதே சிறந்ததாகும். இசை
யை யும் மிஞ்சி பாடல் வரிலளின் அர்த்தம் புரியும் போது
அந்தப்பாடலைப்பாடும் இருவரையும் யார் யார் என இனங்
காணும்போது யாவரும் இந்தச்சங்கடத்தை உணர்வார்கள்.

வருங்காலத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் இதைக்கவனத்
தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

மற்றப்படி அந்த நிக்ழ்ச்சி ரொம்பச்சிறப்பான நிகழ்ச்சியாகவே
அமைந்திருந்தது. விஜே தொலைக்காட்சியினர் பாராட்டப்
படவேண்டியவர்களே.

No comments: