Saturday, September 19, 2009

ஈழத்தமிழரிடம் மாற்றம் தேவை

ஈழ்த்தமிழர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமெனில்
பல விடயங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். முதல் தேவை
யானமாற்றம் அளவுக்கதிகமான சுயநலத்திலிருந்து மட்டுப்
படுத்தப்பட்ட சுயநலத்திற்கு மாறவேண்டும்.பொதுநலம் பே
ணப்படவேண்டும்.சமுதாய விழிப்பு ஏற்படவேண்டும்.எனக்
கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே என்ற சுயநலநோக்கு
ஒழிக்கப்படவேண்டும். யார்குத்தி அரிசியானாலும் சரி தமிழ
ருக்கு விடிவு வேண்டும் என்ற மனநிலை எல்லாத்தமிழரிட
மும் ஏற்படவேண்டும்.ஈழத்தமிழரிடம் இன்றுவரை ஏற்படா
த முக்கியவிடயமானஒற்றுமை முதலில் ஏற்படவேண்டும்.
முதன்முதலில் Crab Mentality என்று சொல்லப்படுகிற மனப்
பான்மையில் இருந்து விடுபடவேண்டும்.

கனடா நாட்டுக்குவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்சி
காரர் மூலம் கனடா வந்து சேர்ந்தவர்களே. அப்படி வந்து சேர்ந்த
ஒருவர் தான் வந்து சேர்ந்ததும் குடியேற்ற அதிகாரிகளிடம் என்ன
சொன்னார் என்பதை இப்போது கீழே தருகிறேன்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர். அவரை அனுப்பி
வைத்த ஏஜென்சிக்காரன் அவரிடம் ரொரன்ரோ விமான
நிலையம் அடைவதற்கு 40 ந்மிடங்கள் இருக்கையில் உங்
கள் பிரயாணப்பத்திரத்தை அழித்துவிட்டு விமான் நிலையம்
அடைந்த்தும் அகதிநிலை கோருங்கள் எல்லாம் நல்லமுறை
யில் முடியும் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதன் படி
இவர் எது வித பிரச்சினையும் இன்றி விமான்நிலையம்
அடைந்தார். ஆனால் ஏஜென்சிகாரன் சொன்னமாதிரி
ஆவணங்களை அழிக்கவில்லை. இவர் முறை வந்து குடி
வரவு அதிகாரியிடம் விபரம் தெரிவிக்கும் போது அவர்
பிரயாணஞ்செய்த பிரயாண அட்டையை அவரிடங்கொ
டுத்து இதில் என் படத்தை ஒட்டி அனுப்பிவைத்தார்கள் இப்ப
டித்தான் ஏஜென்சிகாரர் ஆட்களை அனுப்பிவைக்கிறார்
கள் என்று விளக்கங்கொடுத்தார். அதன் அர்த்தம் என்ன
வென்றால் நான் பிரச்சினை இல்லாமல் வந்துசேர்ந்து
விட்டேன் இனிமேல் யாரும் வரத்தேவையில்லை என்ற
மனப்பான்மைதான். இந்தச்சுயநலம் ஒழிக்கப்படவேண்டும்.

இன்னுமொருசம்பவம் கீழே தருகிறேன் அதையும் பாருங்
கள். நாலு தமிழரை ஒரு ஏஜென்சிக்காரன் அனுப்பிவைத்
தான் அவர்கள் வரும் வழியில் ஒரு விமானநிலையத்தில்
ஒருவரை மறித்துக்கொண்டு மற்றமூவரையும் மேற்
கொண்டு போக அனுமதித்தார்கள். தடுக்கப்பட்டவர் தப்பி
போறவர்கள் போகட்டும் என்று பெருந்தன்மையாய் நினைக்
கவில்லை அந்த அதிகாரியிடம் அவர்கள் மூவரையும் விட்ட
நீ ஏன் என்னை மட்டும் மறிக்கிறாய் என்று மற்றவர்களை
யும் காட்டிக்கொடுத்து அவர்கள் பிரயாணத்தையும் தடுத்து
விட்டார். அவரின் சுயநலப்போக்கால் மற்ற மூவரும் நஷ்டப்
படவைத்துள்ளார் அல்லவா. இதுமாதிரி பல சம்பவங்கள்
நிறைய எழுதலாம். இந்த சுயநல மனப்பான்மை இல்லாது
ஒழிக்கப்படவேண்டும்.

ஒரு சமுதாயம் சுதநதிரம் பெறவேண்டுமானால் அந்தச்ச
முதாயம் முதலில் ஒற்றுமையாகச்செயல்படவேண்டும்.
ஈழத்தமிழரிடம் இல்லாத ஒன்று ஒற்றுமைப்படமுடியாததாகும்.
அன்று செல்வநாயகம், பொன்னம்பலம் &சுந்தரலிங்கம்
போட்டிபோட்டார்கள். அதன் பின்பு பிரபாகரன் மற்றப்
போராளிக்குழுக்கள் போட்டிபோட்டார்கள். இன்று
டக்ளஸ், கருணா, பிள்ளையான், விடுதலைக்கூட்டு
முன்னணி என்று போட்டிபோடுகிறார்கள்.இவற்றை
சரியாகப்புரிந்து கொண்டதால சிங்கள தலைவர்கள்
பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்து தங்கள் நிகழ்ச்சி
நிரல்படிகாரியங்களை ஆற்றிவருகிறார்கள்.

ஒற்றுமை இல்லாததால் இலங்கையில் ஈழத்தமிழரின் இருப்
பு கேள்விக்குறியாக மாறிவருகிறது. இவ்வளவுதூரம் அழிவு
ஏற்பட்டபின்பும் இன்னும் ஈழத்தமிழரிடையே ஒற்றுமை
ஏற்படவில்லையே. புலம்பெயர்ந்த தமிழரிடையேகூட
ஒற்றுமை இல்லை என்பது மிக்கவேதனையாக இருக்கிறது.
எல்லாரும் ஒன்று சேர்ந்தால் முள்வேலிக்குள் அடைபட்ட
மக்களுக்காவது விடுதலையை வேண்டிக்கொடுக்கலாம்.
ஈழத்தமிழரின் இருப்புக்கு ஏதாவது வழிசெய்ய வாய்ப்பு
ஏற்படும் என்பதையும் உறுதியாகக்கூறலாம்.ஈழத்தமிழரே
விழியுங்கள் ஒற்றுமையாகுங்கள் உங்கள் உறவுகளின்
சுதந்திரத்திற்கும் நல்வாழ்வுக்கும் ஆவனசெய்யுங்கள்.

No comments: