Thursday, September 03, 2009

யார் மானத்தமிழர்

நேற்று ஸ்காபரோ சென்ரர்லில் உள்ள வால் மாட் கடைக்குச்
சில பொருட்கள் வாங்கச்சென்றிருந்தேன். வாங்க வேண்டி
யவற்றை வாங்கிக்கொண்டு வெளியேறும் போது எனது
இந்திய நண்பர் சேகரைச்சந்தித்தேன். என்னைக்கண்டதும்
என்ன ஈஸ்வர் சார் செளக்கியமா என்றார். நானும் நான்
நலமாக இருக்கிறேன். எப்படி உங்கள் சுகங்கள் வீட்டில்
எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா என விசாரித்தேன்.
அவரும் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்றார்.
நான் சரி வாருங்கள் காப்பி சாப்பிடுவோம் எனக்கூப்பிட்
டேன். அவரும் சரி என்று என்னுடன் வந்தார். அருகிலுள்ள்
ரிம் கோட் டனில் காப்பி வங்கிகொண்டு அந்த கடைக்கு
முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு
எங்கள் பேச்சைத்தொடர்ந்தோம்.
சேகர்:- சேர் நீங்களும் உங்களின் ஆட்களும் தான் உண்மை
யான தமிழர், நாங்கள் எங்களைத்தமிழர் என்று சொல்ல
முடியாது. நாங்கள் எல்லாம் சுத்த கோழைகள் எங்களிடம்
மருந்துக்குக்கூட வீரம் கிடையாது.
நான் :- ஏன் அப்படிச்சொல்லுகிறிர்.
சேகர்:- நீங்கள் எல்லோரும் தன்மானம் மிக்கவர்கள்,உஙகளிடம்
மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, சமுதாயப்பற்று
முதலியன இருக்கின்றன.காக்கைக்கூட்டம் போல் உங்களுக்
கு ஒன்றென்றால் எல்லோரும் ஒன்று கூடி ஆர்ப்பட்டம்,
கதவடைப்பு, ஊர்வலம் என்று உங்கள் ஒற்றுமையைக்
காண்பிக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் நினைத்தால்
பெருமையாக இருக்கிறது. ஆனால் ஒருவிசயத்தில்
உங்கள் எல்லோர் மீதும் எனக்கு கோபமும் வருத்தமும்
இருக்கிறது.
நான் :- என்ன விசயத்தில் கோபம் எதற்கு மனவருத்தம்.
சேகர் :- நீங்கள் யாரையும் மன்னிக்க மாட்டேன் என்று அடம்
பிடிக்கிறீர்கள்.
நான் :- இல்லைச்சேகர் நீங்கள் எங்களைத்தப்பகப் புரிந்து கொண்டீர்
கள். நாங்கள் துரோகத்தையும் துரோகி களையும் தான் மன்னிப்
பதில்லை. எதிரியை அறுபத்தைந்து வீதம் மன்னித்து விடுகிறோம்
ஏன் மிகுதி முப்பைத்தைந்து வீதம் வைத்துக்கொள்கிறோம் என்றால்
அவன் மறுபடி தப்பு பண்ணாமல் இருக்கிறானா என் எச்சரிக்கையாக
இருக்கிறோம்.
சேகர்:- நீங்கள் என்ன சமாதானம் சொன்னலும் நாங்கள் மன்னித்து மறந்து
விடுவோம்.
நான் :- சேகர் அப்படி மன்னித்து மறந்து விடுவதால்தான் உங்கள் அரசியல்
வாதிகள் கடந்த அறுபது வருடங்களாக மறுபடி மறுபடி உங்கள்
தலையில் மிளகாயை அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சேகர் :- தமிழனுக்கு முகவரி கொடுத்ததே ஈழத்தமிழன் தான். உங்களால்
தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்துவிடும் என்று பல மாக நம்பினேன்
சார். ஆனால் எல்லாம் தவிடுபொடியாகிப்போய் விட்டது. பயாபரா
மாதிரி தோற்றுவிட்டது.
நான் :- சேகர் நீங்கள் சொல்வது தப்பு பயாபரா முற்று முழுசாகத் தோற்க
வில்லை. அந்தப்பிரச்சினையை அடக்க முற்பட்ட நைஜீரிய அரசு
பல மாநிலங்களாகப்பிரித்து அந்தந்த பிராந்திய மக்களுக்கு மாநில
சுயாட்சி வழங்கி விட்டது. இப்போது பயாபரா மக்களும் மாநில
ஆட்சியில் நிம்மதியாகவாழ்கிறார்கள்.
சேகர் :- இது நாள் வரை இச்செய்தி எனக்கு தெரியாமல் போய்விட்டது.
நான் :- சேகர் எந்த ஒரு இனத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி விட
முடியாது. அதனால் ஈழவிடுதலை தோற்கவில்லை. தற்போ
தைக்கு உள்ள சூழநிலையால் அடங்கிப் போனது போல் தோற்றம்
அளிக்கிறது. காலம் கனிந்து வரும்போது மறுபடி ஆர்ப்பரித்து
எழும் விடுதலையை அடையும். கவலையை விடுங்கள்.
இத்துடன் எங்கள் பேச்சை முடித்துக்கொண்டு விடைபெற்றோம், அவர்
தன் வழி போனார் நான் என் வீடு வந்து சேர்ந்தேன். நல்லது நண்பர்களே
உங்கள் அபிப்பிராயங்களைத்தெரிவியுங்கள். மறுபடி சந்திப்போம்.




1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்